Advertisement

நான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு இதனால தான் வந்தேன் – அனிதா சம்பத் பதில்.

நான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு இதனால தான் வந்தேன் – அனிதா சம்பத் பதில்.

August 20, 2021

Anitha Sampath

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

Anitha Sampath

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார். 

Anitha Sampath

மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் செய்தி வாசிப்பை ஏன் விட்டீர்கள், நீங்கள் தான் எப்போதும் நம்பர் ஒன். மீண்டும் நீங்கள் செய்தி வாசிப்பாளராக வரவேண்டும் என்று கூறி இருந்தார். 

Anitha Sampath

இதற்கு பதில் அளித்த அனிதா சமபத், யாரும் என்னை தூக்கல. முதலில் நான் பாலிமர் தொலைக்காட்சியில் பணியாற்றினேன். அதன் பின்னர் நியூஸ்7 தமிழ் அதன் பின்னர் சன் டிவி. சேனலில் இருந்து விலகுவது எங்களுடைய விருப்பம். எப்படி மற்ற துறைகளில் செய்கிறார்களோ அதே போலத்தான் என்னுடைய அடுத்த தேர்வு விஜய் டிவியாக இருந்தது. நான் எனக்கு கிடைக்கும் மற்ற வாய்ப்புகளை அனுபவிக்க செய்தி வாசிப்பத்தை நியூத்திவிட்டேன். எனக்கு எப்போது சவுகரியமாக இருக்கிறது அப்போது நான் மீண்டும் செய்தி வாசிப்பாளராக சேர்ந்து விடுவேன் அப்படின்னு பதில் எழுதி இருக்காங்க.  

Anitha Sampath