Skip to main content

Posts

Showing posts from November, 2021

அடிக்கடி தலையில் நீர் கோர்த்து தலையை தூக்க முடியாமல் பாரமாக இருக்கிறதா? அப்போ இத மட்டும் பண்ணுங்க!

ஒரு சிலருக்கு தலையில் நீர் கோர்த்து அடிக்கடி தலைவலி ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இதற்கு வீட்டிலேயே எளிமையான முறையில் தீர்வு காண முடியும். தலையில் நீர் கோர்த்தால் தலைவலியோடு, தலையும் பாரமாக இருக்கும். சரியாக உட்கார கூட முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். படுத்தால் போதும் என்கிற நிலைமைக்கு போய் விடுவோம். தலையில் நீர் கோர்த்து கொள்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதற்கு என்ன தீர்வு என்பதை இந்த பதிவில் அறிவோம் வாருங்கள். உங்கள் தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் அதிக நீர் இருப்பதால் இவ்வாறு பாரமாக உணர்கிறீர்கள். தலைக்குக் குளித்து விட்டு சரியாக தலையை துவட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் தலைமுடியில் இருக்கும் நீர் மண்டைக்குள் இறங்கிவிடும். அப்படி நன்றாகத் துவட்டி இருந்தாலும் தலைக்கு குளித்து விட்டு உடனே தூங்கினால் அப்போதும் இது போல் மண்டையில் நீர் அதிகமாக சேர்ந்து விடும். மன அழுத்தம், ஓய்வின்மை, அதிக வியர்வை போன்றவையும் தலைவலிக்குக் காரணமாக அமையும். இதற்கு ஆயுர்வேதத்தில் வீட்டிலேயே எளிமையான பொருட்களை பயன்படுத்தி உடனடியாக தீர்வு காண முடியும். இதற்கு தேவையான பொருட்கள

எறும்பு போல எப்போவுமே, சுறுசுறுப்பா அலுப்பு தெரியாமல், வேலை செஞ்சுகிட்டே இருக்கணும்னா தினமும் இதை செய்தால் போதும்! வெற்றி உங்கள் கையில்.

ஒரு வேலையை செய்து முடிக்கவேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அந்த வேலையை காலதாமதம் செய்யாமல் அப்போதே செய்து முடித்து விட வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். வெறுமனே வாயில் சொல்லிக்கொண்டு இருந்தால் மட்டும், வாழ்வில் முன்னேற்றம் வந்துவிடாது. செயலிலும், ஈடுபட வேண்டும். அதற்கு நம்முடைய உடம்பில் சோம்பேறித்தனம் இருக்கவே கூடாது. உடலுக்கு சுறுசுறுப்பு தேவை. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய மனசு, செயல்பட சோம்பேறித்தனம் இல்லாத உடல் தேவைப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள், ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய் என்று சொல்லி வைத்துள்ளார்கள். இதற்குப் பின்னால் நிறைய அர்த்தம் ஒளிந்திருக்கிறது. இதைப் பின்பற்றுபவர்கள் கட்டாயம் வாழ்க்கையில் முன்னேறி கொண்டே தான் செல்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எவரொருவர் நாளை, பிறகு என்று ஒரு விஷயத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கின்றாரோ, ஒவ்வொரு நாளை அவருடைய வாழ்க்கையில் இழந்து கொண்டே இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இப்படிப்பட்டவர்கள் பெரிய கஷ்டத்தை சாதிப்பார்கள். சரிங்க, நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்போது

முடி கொட்டாமல் இருக்க தலைக்கு எதுவும் தடவாதிங்க! 10 நாள் இத குடிச்சாலே போதும்!

தலைமுடி உதிரும் பிரச்சினை இன்று பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய கவலையாக இருந்து வருகிறது. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் நல்ல பலன் கிடைக்காமல் சங்கடப்பட்டு வருகிறோம். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள் ஏராளம் விற்பனைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் மாதக் கணக்கில் பயன்படுத்தினாலும் கூட நமக்கு சரியான தீர்வு மட்டும் கிடைப்பதில்லை. தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் சரியான சத்துள்ள உணவை நாம் எடுத்துக் கொள்ளாதது தான். சரிவிகித உணவு எடுத்துக் கொண்டால் தலை முடி உதிர்வது நிற்கும். ஆனால் இன்றைய சூழலில் சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதற்கு யாருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது. இதனால் எண்ணெய் விற்பனை மட்டும் படு ஜோராக நடந்து வருகிறது. எந்த எண்ணையை நாம் வாங்கி தடவினாலும், முடி உதிர்வது அதிகமாகிறதே தவிர குறைந்த பாடில்லை என்கிற புலம்பல் தான் நம்மிடம் இருக்கிறது. செயற்கையாக கிடைக்கும் இந்த எண்ணெய்களை விட, இயற்கையாக வீட்டிலேயே சில எண்ணெய்களை தயாரித்து நாம் உபயோகித்து வரலாம். அப்படி இருந்தாலும் கூட உங்களால் இதற்கான முழு தீர்வை கொடுக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு மிக முக்கி

டீ, காபி தவிர்க்க நினைப்பவர்கள் இத ட்ரை பண்ணுங்க ரொம்ப நாள் ஆரோக்கியமாக இருப்பீங்க!

காலையில் எழுந்ததும் பல் தேய்த்து விட்டு முதலில் மனமும், நாவும் விரும்புவது இந்த டீ மற்றும் காபியை தான். காலம் காலமாக இந்த பழக்கத்தை விட முடியாமல் தவிப்பவர்கள் பலரும் உங்களில் இருக்கலாம். டீ, காபி அருந்துவது நல்லதில்லை என்று எவ்வளவு பேர் கூறினாலும் அதை நம்மால் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. டீ, காபி போன்றவற்றிற்கு பதிலாக இந்த கோதுமை பாயாசத்தை செய்து குடித்து பாருங்கள். இது டீ, காபியை மறக்கடிக்கவும் உதவும். அதே சமயத்தில் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் உங்களுக்கு கொடுக்கும். கோதுமை பாயாசம் அல்லது கோதுமை ட்ரிங்க்ஸ் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம். காபியில் இருக்கும் காஃபின்(caffeine)என்கிற பொருள் ஒரு வகை போதை தருவது. அதனால் தான் தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு அதை நிறுத்த முடியாத அளவிற்கு மூளையை தூண்ட செய்து விடுகிறது. தொடர்ந்து நாம் ஒரு நேரத்தில் காபி குடிப்பவர்களாக இருந்தால்! ஒரு நாள் குடிக்காமல் இருந்தாலும் நமக்கு ஒரு மாதிரியாக இருக்கும். குடித்தே ஆக வேண்டும் என்கிற மனநிலையை உருவாக்கும். அதைத் தான் அடிக்சன் என்கிறோம். ஒரு விஷயம் தவறு என்று தெரி

சொன்னா நம்பவே மாட்டீங்க! தலைமுடி உதிர்வை 10 நாட்களில் சரிசெய்ய, இதை விட சுலபமான தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது.

தலை முடி உதிர்வு பிரச்சனையை உடனடியாக நிறுத்தி, வழுக்கை விழுந்த இடத்தில், உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்ய, இந்த குறிப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கிறது. உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் தலை மொத்தமாக வழுக்கையாகிவிடும் என்று நினைப்பவர்கள், இந்த குறிப்பை உடனடியாக செய்து பாருங்கள். நல்ல பலனை அடையலாம். இந்தப் பதிவில் இரண்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். முதல் குறிப்பு: தலை முடி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வையும், உடனடி தீர்வையும் தரக்கூடிய சக்தி நம் சமையலறையில் இருக்கும் வெந்தயத்திற்கு உள்ளது. 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே, சுத்தமான குடிக்கிற தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிடுங்கள். ஒரு டம்ளர் அளவு தண்ணீருக்கு 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் போதுமானது. மறுநாள் காலை எழுந்து, வெந்தயத்தை மட்டும் தனியாக பிழிந்து, தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து, அந்த தண்ணீரை உங்களது தலைமுடியில் மசாஜ் செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டில் ஹேர் ஸ்ப்ரே பாட்டில் இருந்தாலும் கூட, அதில் இந்த வெந்தய

இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க! முடி தாறுமாறா வளர ஆரம்பிக்கும். யார் நினைத்தாலும் முடி வளர்ச்சியை தடுத்து நிறுத்தவே முடியாது.

எவ்வளவுதான் முயற்சி செய்தும், ஏதேதோ எண்ணையை தலையில் தேய்த்தாலும், முடி கொட்டுவது நிற்கவே இல்லை. முடி வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதற்கு என்னதான் தீர்வு? என்று புலம்புபவர்களுக்கு இந்த பதிவு. முடி வளர்ச்சியை அதிகரிக்க, ஒரு நிரந்தரத் தீர்வு உண்டு. ஒரு இயற்கையான எண்ணெயை நம் வீட்டிலேயே தயாரிக்கும் முடியும். தலைமுடியை வளரச் செய்யும் சில பொருட்களை வைத்து, அந்த தேங்காய் எண்ணையை எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த எண்ணையை தினம்தொரும் மயிர்கால்களில் படும்படி தேய்த்து வந்தாலே போதும். முடி வளர்வதை ஒரே மாதத்தில் நம்மால் கண்கூடாக காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவாரம் பூ எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, அவாரம் இலை, ஆவாரம் தண்டு, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு சிறிய கட்டு அளவு எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகள், பூ மற்றும் இலையோடு சேர்த்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளுங்கள். மருதாணி இலை ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த நெல்லிக்காய் 10 துண்டுகள். இந்த பொருட்கள் அனைத்தையும் அகலமான ஒரு

முகத்திற்கு பவுடர் போட்ட கொஞ்ச நேரத்தில் எண்ணெய் லிட்டர் கணக்குல வழியுதா? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தன்மை உள்ள சருமம் காணப்படுகிறது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான சருமம் அமைவதில்லை. அதனால் தான் ஒருவர் முகத்திற்கு பயன்படுத்தும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு ஒவ்வாமை காரணமாக அரிப்பு அல்லது தடிமன் ஏற்படுகிறது. ஒருவருக்கு வறண்ட சருமம் இருக்கும், ஒருவருக்கு சாதாரண சருமம் இருக்கும், இன்னொரு தரப்பினருக்கு அதிகப்படியான எண்ணெய் தன்மை உள்ள சருமம் காணப்படும். இப்போது எண்ணெய் தன்மை அதிகம் உள்ள சருமம் உடையவர்கள் என்ன செய்தால் தங்களுடைய முகத்தை பளபளவென பட்டு போல் வைத்துக் கொள்ள முடியும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் முதலில் முகத்தை அடிக்கடி கைகளால் தொடுவதை நிறுத்த வேண்டும். இதை செய்தாலே உங்களுடைய பாதி பிரச்சனை தீர்ந்து விடும். மீதி பிரச்சனை தீர கீழ்வரும் இந்த டிப்ஸ்களை பயன்படுத்துங்கள். அதிகப்படியான எண்ணெய் தன்மை உள்ள சருமம் உடையவர்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு முகத்தை கழுவி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதை காட்டிலும் நீங்கள் சோப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு அதற்

எதை தேய்த்தாலும் பொடுகு பிரச்சனை போகலையா? அப்போ இத மட்டும் செஞ்சு பாருங்க! உடனே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

நம் மண்டை ஓட்டு பகுதியின் இறந்த செல்கள் செதில் செதிலாக உதிர்வதை தான் நாம் பொடுகு என்று அழைக்கிறோம். இது சிறியவர், பெரியவர் என்று பாராமல் அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதிக்கிறது. பொடுகு பிரச்சனை எதனால் வருகிறது தெரியுமா? எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு மண்டையோட்டில் சுரக்கும் அதிகப் படியான எண்ணெய் காரணமாகவும், தலையை சுத்தமாக வைத்திருக்காத காரணத்தினாலும், தலைக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது மற்ற அழகு சாதனங்கள் கூட பொடுகு உண்டாவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதனை நிரந்தரமாக சரிசெய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை எப்படி பயன்படுத்துவது? என்பது தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம். டிப்ஸ் 1: நல்லெண்ணெயுடன் சம அளவிற்கு எலுமிச்சைச் சாறு கலந்து வாரம் ஒரு முறை கூந்தலின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவி ஊறவிட்டு ஷாம்பு போட்டு அலசினால் பொடுகு தொல்லை தீரும். டிப்ஸ் 2: தயிரை ஒரு கப் அளவிற்கு எடுத்து அதில் கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வாரமிருமுறை தலையில் தடவி அலசினால் கூந்தல் பட்டுப் போல மின்னும். கண்டிஷனர் போட்டது போல் இருக்கும். பொடுகு தொல்லையும் தீரும். மிளகு தூள் சேர்ப்பத

முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகள் சட்டென போக இதை விட சிறந்த டிப்ஸ் இருக்க முடியாது. வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்களே போதும்!

முகத்திலிருக்கும் இறந்த செல்கள் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாக இருக்கின்றன. முகப்பருக்களை விட இந்த கரும்புள்ளிகள் அவ்வளவு எளிதாக மறைவதில்லை. நீண்ட நாட்கள் முகத்தில் தங்கியிருந்து முக அழகைக் கெடுத்துக் கொண்டிருக்கும். இதனை நீக்குவதற்கு நீங்கள் முயற்சி செய்தால் அதுவே பெரிய தொல்லையாக மாறிவிடும். அந்த இடத்தில் முகப்பருக்களும் உருவாகக்கூடும். அதனால் தான் எப்போதும் முகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கரும்புள்ளிகளை பொறுத்தவரை நீங்களாகவே கைகளால் அவற்றை நீக்குவது நல்லதல்ல. இந்த கரும்புள்ளியை மாயமாக மறைய வைக்க நம் வீட்டில் கிடைக்கும் சாதாரணமாக இருக்கும் மூன்று பொருட்களே போதுமானது. சருமத்தை பொறுத்தவரை சோப்புகளை பயன்படுத்துவதை விட பயத்தமாவு என்கின்ற பாசிப்பயறு கொண்டு உருவாக்கப்படுகின்ற மாவை குளியலுக்கு பயன்படுத்துவது இளமையை தக்க வைக்க பெருமளவு உதவி புரியும். வயதான தோற்றத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றல் இந்த பயத்தமாவுக்கு உண்டு. அது போல் சிறந்த ஸ்க்ரபராக கல் உப்பு முகத்திற்கு பயன்படுகிறது. அதனால் இந்த கல் உப்பை தூளாக்கி நன்கு மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாலில் இருக்க

அதிகப்படியான தொப்பையை குறைக்க தினமும் 1 லிட்டர் இந்த தண்ணீரை மட்டும் குடித்தாலே போதுமே!

உங்களுக்கு அதிகப்படியான சதை வயிற்றில் இருந்தால் இந்த முறையை தாராளமாக பின்பற்றி வரலாம். 20 நாட்களில் 4 கிலோ வரை உங்கள் தொப்பையை குறைத்து விடலாம். உடம்பில் எங்கெல்லாம் அதிக சதைப்பிடிப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் சதைகள் குறைந்து உடல் எடையில் மாற்றம் உண்டாவதை நீங்களே உணர ஆரம்பிப்பீர்கள். புதிதாக எதுவும் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும், நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் இந்த 3 பொருட்களை வைத்தே தொப்பையை குறைக்க கூடிய ஆற்றல் பெற்ற தண்ணீரை தயார் செய்ய முடியும். அதைப் பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள். இன்று பலருக்கும் தங்களுடைய உடல் எடையை பற்றிய கவலை அதிகமாக காணப்படுகிறது. எப்படியாவது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிற உத்வேகம் இருக்கிறது. சிலருக்கு எதுவும் சாப்பிடாமலேயே தொப்பை வந்திருக்கும். சிலருக்கு அதிகம் அனாவசிய உணவுகளை எடுத்துக் கொள்வதால் கொழுப்பு சேர்ந்து தொப்பை வந்திருக்கும். எப்படியாக இருந்தாலும் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் பெருமளவு வீண் சதைகளை குறைத்துக் கொள்ள முடியும். இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. பச்சை பசேலென இருக்கும் புதினா இலைகளை ஒர

தப்பித்தவறியும் தயிருடன் இந்த உணவுப் பொருட்களை சேர்த்து விடாதீர்கள்! அப்புறம் ஆபத்து உங்களுக்கு தான்.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் அதிகம் சத்துக்கள் மிகுந்தவை. இதனை தினசரி உணவில் சிறிதளவாவது சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும். வெறும் தயிரை தினமும் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வரவே வராது என்பார்கள். அந்த அளவிற்கு அற்புத சக்தி படைத்த தயிர் அதிக கால்சியம், விட்டமின் b12, விட்டமின் b2, பொட்டாசியம் போன்ற சத்துக்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. தினமும் உணவில் தயிர் சேர்த்து கொள்பவர்கள் எந்தெந்த உணவுகளை உடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது? அப்படி சேர்த்தால் என்ன ஆகும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். தயிருடன் எல்லா உணவுப் பொருட்களையும் சுலபமாக சேர்த்து சாப்பிட்டு விடக்கூடாது. இதனால் எதிர் விளைவுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. இது சிலருக்கு தெரிந்து இருந்தாலும், பலருக்கு இன்னுமும் தெரியாமல் தான் இருக்கின்றது. தயிர் சாப்பிடும் ஒவ்வொருவரும் கட்டாயம் இந்த விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். தயிருடன் ஒரு சிலர் மாம்பழம் வைத்து சுவைப்பது உண்டு. இது சூப்பரான காம்பினேஷனாக இருந்தாலும் உடலுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்

முடி உதிர்வை சட்டுன்னு 2 வாரத்தில் கட்டுப்படுத்தவும், வழுக்கையில் கூட, 30 நாட்களில் முடியை வளரச் செய்யவும், இந்த எண்ணெயை மட்டும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க!

நம் அழகுக்கு மேலும் அழகு சேர்க வேண்டுமென்றால், நம்முடைய முடி அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்கவேண்டும். காலம் மாறுவதற்கு ஏற்ப, சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, நம்முடைய முடி உதிர்வு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. இந்த முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு, ஒரு எண்ணெய் உள்ளது. நம்முடைய எல்லோரது வீட்டிலும், இருக்கக்கூடிய இந்த ஒரு பொருளை பயன்படுத்தி எப்படி அந்த எண்ணெயை தயாரிக்கப் போகிறோம் என்று தெரிந்து கொள்ளலாமா? அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும், பெரிய வெங்காயம் தான் அந்தப் பொருள். இந்த பெரிய வெங்காயத்தை, தோல் உரித்து, நான்கு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்தால் 2 பெரிய வெங்காயம் எடுத்துக் கொள்ளலாம். பெரிய சைஸ் வெங்காயம் என்றால் 1 பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தோலுரித்து நான்காக வெட்டிய, பெரிய வெங்காய துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு, 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் ஊற்றி, நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இரும்பு கடாயில் 100 கிராம் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொண்டு, அதில் அரைத்த விழுதை சேர்த்து, அடுப்பில