ஒரு சிலருக்கு தலையில் நீர் கோர்த்து அடிக்கடி தலைவலி ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இதற்கு வீட்டிலேயே எளிமையான முறையில் தீர்வு காண முடியும். தலையில் நீர் கோர்த்தால் தலைவலியோடு, தலையும் பாரமாக இருக்கும். சரியாக உட்கார கூட முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். படுத்தால் போதும் என்கிற நிலைமைக்கு போய் விடுவோம். தலையில் நீர் கோர்த்து கொள்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதற்கு என்ன தீர்வு என்பதை இந்த பதிவில் அறிவோம் வாருங்கள். உங்கள் தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் அதிக நீர் இருப்பதால் இவ்வாறு பாரமாக உணர்கிறீர்கள். தலைக்குக் குளித்து விட்டு சரியாக தலையை துவட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் தலைமுடியில் இருக்கும் நீர் மண்டைக்குள் இறங்கிவிடும். அப்படி நன்றாகத் துவட்டி இருந்தாலும் தலைக்கு குளித்து விட்டு உடனே தூங்கினால் அப்போதும் இது போல் மண்டையில் நீர் அதிகமாக சேர்ந்து விடும். மன அழுத்தம், ஓய்வின்மை, அதிக வியர்வை போன்றவையும் தலைவலிக்குக் காரணமாக அமையும். இதற்கு ஆயுர்வேதத்தில் வீட்டிலேயே எளிமையான பொருட்களை பயன்படுத்தி உடனடியாக தீர்வு காண முடியும். இதற்கு தேவையான பொருட்கள
Cinemugam is a popular source of entertainment news and updates focused on Tamil cinema and television.