Advertisement

2 மாதத்தில் முடி வளர்ச்சியை கண்கூடாக காணலாம். வீட்டிலேயே, இந்த எண்ணெயை, இயற்கையாக இப்படி தயார் செய்து முடியில் தேய்த்து வந்தால்!

2 மாதத்தில் முடி வளர்ச்சியை கண்கூடாக காணலாம். வீட்டிலேயே, இந்த எண்ணெயை, இயற்கையாக இப்படி தயார் செய்து முடியில் தேய்த்து வந்தால்!

இந்த எண்ணெயை வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதற்கு முன்பாகவே, உங்களது முடியை நீங்களே அளவு எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதன்பின்பு 6 மாதங்கள் கழித்து, எத்தனை இன்ச் உங்களது முடி வளர்ந்துள்ளது என்பதையும் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். இரண்டே மாதத்தில் உங்களது முடி துண்டு துண்டாக வளர்ச்சி அடைந்திருப்பதை, உங்களால் நன்றாக உணர முடியும். அடுத்த நான்கு மாதத்தில் வளர்ந்த, துண்டு முடிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அடர்த்தியாகவும், நீளமாகவும் நல்ல வித்தியாசத்தை காட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் இன்ச் டேப், ஸ்கேல் எதை வைத்து அளந்து வேண்டுமென்றாலும், இதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சந்தேகமே இல்லை. இப்போது இந்த எண்ணெயை எப்படி தயார் செய்யலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

hair-growth

எண்ணெயை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்-1 லிட்டர்

பெரிய நெல்லிக்காய்-7

பச்சை கருவேப்பிலை-ஒரு கைப்பிடி அளவு

பெரிய வெங்காயம்-2.

நிழலில் உலர வைத்த செம்பருத்திப் பூக்கள் (சிவப்பு நிற ஒற்றைச் செம்பருத்தி)-20

முதலில் நெல்லிக்காய்களிலிருந்து கொட்டையை நீக்கிவிடவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், பச்சை கருவேப்பிலை, பெரிய வெங்காயம் இவை மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு விழுதாக உங்களுக்கு கிடைத்துவிடும். அதன் பின்பு ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் இருந்து 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயை ஒரு இரும்பு கடாயில் ஊற்றி, அதில் நீங்கள் மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து, மிதமான தீயில் ஸ்டவ்வில் வைத்து காய விட வேண்டும். காய வைக்கும்போது கடாயை தட்டு போட்டு மூடி விட வேண்டும். இல்லாவிடில் எண்ணெனை கொதிக்கும் போது, எல்லா எண்ணெயும் வெளியே சிதறி வீணாகிவிடும். அந்த விழுதின் ஈரப்பதம் முழுமையாக நீங்கி, கருப்பு நிறமாக மாற 1/2 மணி நேரம் எடுக்கும். ஈரமாக கொட்டிய விழுதின் சலசலப்பு முழுமையாக அடங்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் எண்ணெய் கெட்டுப் போய்விடும்.

Nellikai benefits in tamil

அந்தக் கடாயோடு, எண்ணெய் சேர்த்த விழுதினை ஒரு நாள் முழுவதும் அப்படியே ஓரமாக ஒரு இடத்தில் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடுங்கள். அடுப்பிலிருந்து கடாயை இறக்கிய பின்பு தட்டுப் போட்டு மூடக்கூடாது. அதன் வியர்வை தண்ணீர், எண்ணெயில் வடிந்தால் எண்ணெய் கூடிய சீக்கிரம் கெட்டுப் போய்விடும். துணி போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். அடி கனமாக இருக்கும் இரும்பு கடாயில் இதை காய வைப்பது தான் சரியான முறை. தடிமன் இல்லாத கடாயில் வைத்தால் சிக்கிரமே அடி பிடிக்கும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

24 மணி நேரம் கழித்து, ஒரு வடிகட்டியில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் விழுதினை போட்டு எண்ணெயை மட்டும் நன்றாகப் பிழிந்து வடிகட்டி எடுக்க வேண்டும். அந்த விழுதை வடிகட்டியில் போட்டு ஒரு 2 மணி நேரம் விட்டுவிடுங்கள் எண்ணெய் முழுவதும் தனியாக வடிந்துவிடும்.

எண்ணெயை கொதிக்க வைத்து தயாரித்த பின்பு, அந்த எண்ணெயின் அளவு சிறிது குறைந்திருக்கும். பரவாயில்லை. நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அந்த எண்ணெயோடு, மீதம் எடுத்து வைத்துள்ள 1/2 லிட்டர் எண்ணெயையும் சேர்த்து விடுங்கள். அந்த எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கண்ணாடி பாட்டிலில் உலரவைத்த செம்பருத்தி பூக்களை, போட்டு விட வேண்டும். செம்பருத்திப் பூக்கள் எப்பவும் அந்த எண்ணெயிலேயே இருக்க வேண்டும். இந்த எண்ணெயை தினம்தோறும் முடியின் வேர் பகுதியில் நன்றாக படும்படி தேய்த்து வரவேண்டும்.

evion-400

Evion 400 என்ற மாத்திரையை வாங்கி அதன் உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும், விருப்பம் உள்ளவர்கள் இந்த எண்ணெயில் சேர்த்துக் கொள்ளலாம். முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சக்தி இந்த மாத்திரையில் அடங்கியுள்ளது. சிலபேர் செயற்கையாக இருக்கும் இந்த பொருளை கலக்கம் வேண்டாம் என்று நினைப்பார்கள். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு ஐந்து மாத்திரையில் உள்ள ஜெல்லை கலந்து கொள்ளலாம் தவறில்லை.

6 மாதம் தொடர்ந்து விடாமல் இந்த எண்ணெயை உங்கள் தலையில் தடவி வந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு. பொறுமை அவசியம் தேவை. கட்டாயம் உங்களது முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதில் எந்த சந்தேகமும் இல்லை.