Advertisement

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக நீக்கிவிடலாம்! நிரந்தர தீர்வைத் தரும் குறிப்பு.

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக நீக்கிவிடலாம்! நிரந்தர தீர்வைத் தரும் குறிப்பு.


பெண்களுக்கு முகத்தில் இருக்கும் பூனை முடி பிரச்சனை பெரிய பிரச்சனை தான். ஹார்மோன் பிரச்சனையினால் ஏற்படக்கூடிய இதை நிரந்தரமாக, சிலநாட்களில் இயற்கையான பொருட்களை வைத்து எப்படி நீக்கலாம் என்பதைப் பற்றியும், இதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றியும், இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சில நாட்களில் அதன் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

hair-on-face

இதற்கு தேவையான பொருட்கள்:

சர்க்கரை-2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை பழம்-1 (சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்)

கடலை மாவு-1 டேபிள்ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள்-1/2 டேபிள்ஸ்பூன்

பூலாங்கிழங்கு பொடி அல்லது கோரை கிழங்கு பொடி-ஒரு டேபிள்ஸ்பூன்.

முதலில் ஒரு சிறிய சில்வர் பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையும், எலுமிச்சை பழச் சாறையும், அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரையும் விட்டு சூடுபடுத்த வேண்டும். ஆனால் அடுப்பில் நேரடியாக வைக்கக் கூடாது. Double boiling என்று சொல்லப்படும், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, அதன் மேல் இந்த சர்க்கரை எலுமிச்சை பழம் சாறு கலந்த கலவையை வைத்து, 2 நிமிடம் நன்றாக சர்க்கரை கரையும் வரை தயார் செய்து கொள்ளவும்.

double-boiling

அதன் பின்பு அந்த பாத்திரத்தை வெளியே எடுத்து வைத்து, அதில் கடலை மாவு ஒரு ஸ்பூன், பூலான் கிழங்கு பொடி அல்லது கோரைக்கிழங்கு பொடி இது மிகவும் அவசியமான ஒன்று, அதில் ஒரு ஸ்பூன். கஸ்தூரி மஞ்சள் 1/2 ஸ்பூன் இவைகளை நன்றாக சேர்த்து கலந்து தண்ணீர் பதமும் இல்லாமல், கெட்டி பதம் இல்லாமல் சர்க்கரை இறுகி பிசுபிசுப்புத் தன்மையோடு ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும்.(குறிப்பிட்டுச் சொல்லப் போனால் வேக்சிங் செய்யும் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.)

ஆனால் இது அதிக அளவு சூட்டில் இருக்காது. அதை நம்முடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவி ஃபேனுக்கு அடியில் அமர்ந்து காயவைத்துக் கொள்ளவும். இந்த கலவையை கையில் எடுத்து முகத்தில் தடவுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். சிறிய பிரஷ் இருக்கும் பட்சத்தில் அதை உபயோகப்படுத்தி முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

turmeric-face

5 நிமிடம் கழித்து முகத்தில் இருக்கும் அந்த வேக்ஸ் பிசுபிசுப்பு தன்மையை அடையும். மறுபடியும் இரண்டாவது முறை அந்த கலவையை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக மூக்கின் மேல், உதட்டின் மேல் பக்கம், தாடை பகுதியில் பெண்களுக்கு இந்த தேவையற்ற முடி பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் மட்டும் தடவிக்கொண்டு கூட இந்த முறையை செய்து பார்க்கலாம்.

இதை போன்று 5 நிமிடம் கழித்து, மூன்று முறை உங்கள் முகத்தில் இந்த கலவையை தடவிக் கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்தவுடன் உங்கள் கைகளில் கொஞ்சம் தண்ணீரைத் தொட்டு எந்த இடத்தில் எல்லாம் முடி பிரச்சனை இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் உள்ளங்கைகளை லேசான அழுத்தம் கொடுத்து, வட்ட வடிவில் தேய்த்துக் கொடுக்து மசாஜ் செய்யவும். பிசுபிசுப்பு தன்மையுடன், அந்த வேக்ஸ் கலவையோடு சேர்ந்து, உங்கள் முகத்தில் இருக்கும் பூனை முடிகளும் நீங்கிவிடும்.

face

முதல்முறை இதை செய்யும் போதே நல்ல வித்தியாசத்தை உணரலாம். வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ இதைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம், நாளடைவில் முடி வளரும் இடங்களில் அந்த வளர்ச்சியானது முழுமையாக தடை படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.