Advertisement

உங்க வீட்ல தேங்காய் எண்ணெய் இருக்கா? அப்போ நீங்களும் பேரழகா மாறலாம்.

உங்க வீட்ல தேங்காய் எண்ணெய் இருக்கா? அப்போ நீங்களும் பேரழகா மாறலாம்.

முகத்தை அழகாக்கி கொள்வதற்கு ஆண், பெண் என்ற எந்த பாகுபாடுமின்றி சில நூறு ரூபாய் நோட்டுகளை சரளமாக செலவழிக்க தயாராக இருக்கிறோம். அழகே ஒருவருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. இன்றைய பெண்களுக்கு தைரியம் ஏற்படுவதற்கு தங்களைத் தாங்களே அழகுபடுத்திக் கொள்வதும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இவ்வாறாக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண தேங்காய் எண்ணெயை வைத்துக் கொண்டு எப்படி பேரழகாக மாறலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

தேங்காய் எண்ணெயில் ஏராளமான சத்துக்கள் கொட்டிக் கிடக்கிறது. உச்சி முதல் பாதம் வரை தேங்காய் எண்ணெயால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். அதிலும் குறிப்பாக தேங்காய் எண்ணெய் ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்க வல்லது. மேலும் சில வகை கிருமிகளையும் எதிர்த்துப் போராடுகிறது. தேங்காய் எண்ணெயை தலைக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நன்மைகள் தரக் கூடிய ஆற்றல்கள் நிறைந்திருக்கின்றன. தேங்காய் எண்ணெய் முகத்திற்கு எல்லா வகையிலும் பயன்படுகின்றன. ஃபேஸ் வாஷ் ஆகவும், மாய்ஸ்சுரைசராகவும், க்ளென்சராகவும், ஸ்க்ரப்பராகவும், சன் ஸ்க்ரீனாகவும் கூட பயன்படுத்த முடியும்.

உங்களின் எப்பேர்பட்ட சருமத்தையும் மாசு மருவின்றி, சுத்தமாகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கு பின்வரும் இந்த வழிமுறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். பலருக்கும் முகத்தில் இருக்கும் அலர்சியால் பலவித பிரச்சனைகள் உண்டாகிறது. அத்தகைய அலர்சியை தேங்காய் எண்ணையால் போக்க முடியும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இதற்கு பெருமளவு துணை புரியும்.

face

தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ் ஆக எப்படி பயன்படுத்தலாம்?

அடி கனமான வாணலியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஆலிவ் ஆயிலை 5 ஸ்பூன் விட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடரை கலந்து கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் எண்ணெய் தேவையான அளவிற்கு கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும். சூடு ஆறியதும் ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் தினமும் காலையில் எழுந்ததும் இந்த எண்ணெயை ஃபேஸ் வாஷ் போல மசாஜ் செய்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் சுத்தமடையும்.

சிலருக்கு உதடுகள் காய்ந்து போயிருக்கும். வெடிப்பு தன்மையுடன் இருக்கும். இவர்கள் லிப் பாம் பயன்படுத்துவார்கள். லிப் பாம் பயன்படுத்தியும் குணமாகாதவர்களுக்கு, லிப் பாம் உடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் உதடுகள் வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் மென்மையாக மாறிவிடும். நீங்கள் இரவு கிரீம்களை பயன்படுத்துபவர்களாக இருப்பவராயின், நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசர் க்ரீமுடன் சில துளி தேங்காய் எண்ணையை கலந்து முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு நீங்கும். இரவு கிரீமை பயன்படுத்தாதவர்கள் வெறும் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி விட்டு தூங்க சென்றால் சருமம் மாசுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு மென்மையடையும்.

men-face

சிலருக்கு முகத்தில் கொசு அல்லது எறும்பு கடித்து வீங்கி போயிருக்கும். இதனால் முகத்தின் அழகு கெட்டுவிடும். இதில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி கொள்ளலாம். தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் இந்த பிரச்சனை உடனே சரியாகிவிடும். செயற்கை பூச்சுகளை கொண்டு முகம் முழுவதும் மேக்கப் செய்து கொள்பவர்கள் அதனை நீக்குவதற்காகவாவது செயற்கையை தவிர்ப்பதே நல்லது. இயற்கையாக கிடைக்கக்கூடிய தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தினால் உங்கள் சருமம் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.

கோடை காலம் துவங்கி விட்டது. வெயிலின் தாக்கத்தினால் பல பேருக்கு வேர்குரு என்று கூறப்படும் ‘வேனிற்கட்டிகள்’ தலைகாட்ட ஆரம்பித்திருக்கும். இதனால் சருமம் முதிர்ந்த தோற்றத்தை தரும். அரிப்பும், எரிச்சலும் வாட்டி எடுத்துவிடும். விதவிதமான பவுடர்கள் வாங்கி பூசிக் கொண்டாலும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை என்று புலம்புபவர்கள், கவலை கொள்ளத் தேவையில்லை. உங்கள் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர் சத்தை மீட்டுத்தர தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். குழந்தைகளுக்கு குளித்து முடித்ததும் தலைக்கு மட்டுமல்லாமல், கழுத்தை சுற்றியும், முதுகு பகுதியிலும் தேங்காய் எண்ணையை தடவி விடுங்கள்.

scrubbing-face

தேங்காய் எண்ணெயை ஸ்கிரப்பராக எப்படி பயன்படுத்துவது?

தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இக்கலவையை ஸ்கிரப்பராக முகத்திற்கு வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும், வட்டமாக மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளை திட்டுகள், சிறுசிறு முடிகள் நீங்கி முகம் பளிச்சென்று பேரழகாக காட்சியளிக்கும்.