Advertisement

அடம் பிடிக்கும் சுட்டி குழந்தை சமத்தாக சாப்பிட வேண்டுமா? இதோ சூப்பரான 3 ஆன்மீக டிப்ஸ்.

அடம் பிடிக்கும் சுட்டி குழந்தை சமத்தாக சாப்பிட வேண்டுமா? இதோ சூப்பரான 3 ஆன்மீக டிப்ஸ்.

பல தாய்மார்களுக்கு இன்று இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று குழந்தை சாப்பிட அடம் பிடிப்பது தான். என்ன செய்தாலும் சாப்பிட மட்டும் வாயை திறப்பதில்லை. சாப்பிடாமல் அடம் பிடித்துக் கொண்டே இருக்கும். என்னதான் வெளியே சென்று வேடிக்கை காட்டி ஊட்டினாலும் ஒரு பிரயோஜனமும் இருக்காது. சாப்பாடு காய்ந்து தான் போகுமே ஒழிய, அந்த குழந்தை அந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்காது. இதனால் உங்களுக்கு கவலை தான் மிஞ்சும். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். அதைப் பற்றிய விரிவான தகவல்கள் இப்பதிவில் காணலாம்.

baby-eating

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நீங்கள் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது பல பேரது கண் உங்கள் குழந்தையின் மீது விழும். இது உங்களுக்கும் தெரியும். ஆனால் வேறு வழி இல்லை. வெளியே வந்து வேடிக்கை காட்டி ஊட்டினாலும் சரியாக குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இதனால் தெருவில் வந்து தான் குழந்தைக்கு சோறூட்ட வேண்டிய நிலை உள்ளது. அதே போல் சிலர் மொபைல் போனை கையில் கொடுத்து சாப்பாடு ஊட்டி விடுவார்கள். இது மிகவும் தவறான செயலாகும். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மொபைல் போனில் இருந்து வரும் ஒளியானது நிச்சயம் பிஞ்சு கண்களை பாதிக்கும். அவர்களின் கவனமும் சாப்பிடுவதில் இருக்காது. அந்த மொபைல் போனிலேயே இருக்கும். இது மூளையும் பாதிக்கும்.

டிப்ஸ் 1:

குழந்தைக்கு தட்டில் வெறும் சாதம் போட்டதும் அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக 5 உருண்டைகள் எடுத்து வைக்கவும். ஒரு உருண்டை மஞ்சள் கலந்தும், ஒரு உருண்டை குங்குமம் கலந்தும், ஒரு உருண்டை கரித்தூள் கலந்தும், கடைசி உருண்டை எழுமிச்சை சாற்றை கலந்தும் வையுங்கள். மீதமிருக்கும் ஒரு உருண்டை அப்படியே இருக்கட்டும். பகல் 12 மணிக்கு உச்சி வேலை ஆரம்பமானததும் கிழக்கு நோக்கிபடி வாசலின் நடுவில் குழந்தையை நிற்க வையுங்கள். இந்த ஒவ்வொரு உருண்டையையும் குழந்தைக்கு வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மும்முறை சுற்றி திருஷ்டி கழிக்கவும். பின்னர் அந்த உருண்டைகளை ஒன்றாக கலந்து, நான்காக பிரித்து கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு திசையில் தூக்கி எறியுங்கள். திருஷ்டி கழித்ததும் குழந்தையின் பாதங்களையும், உங்களின் பாதங்களையும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவிவிட்டு வீட்டிற்குள் சென்று விடவும். இதன் மூலம் குழந்தைகளுக்கு இருக்கும் திருஷ்டி கழியும் என்பது நம்பிக்கை.

baby-eating2

டிப்ஸ் 2:

குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது ஒரு சிறு உருண்டையை சாப்பாடு ஊட்டும் கிண்ணத்தின் இடதுபுறம் ஓரமாக வைக்கவும். குழந்தை சாப்பிட்டு முடித்ததும், அந்த உருண்டையை குழந்தையின் தலையை சுற்றி மூன்று முறை திருஷ்டி கழிக்கவும். பின்னர் மீண்டும் அந்த உருண்டை கிண்ணத்தின் இடது ஓரத்தில் வைத்துவிடவும். குழந்தையின் கைகளை உருண்டையின் மேல் கழுவ வையுங்கள். அந்த சாதத்தை கரைத்து ஒரு ஓரமாக ஊற்றி விடுங்கள். பின்னர் தட்டையும் உங்களது கையையும் கழுவி விட்டு உள்ளே செல்லுங்கள். இதுபோன்று தொடர்ச்சியாக ஒரு வாரம் செய்யுங்கள் முதல் நாள் தவிர மற்ற நாட்களில் அந்த உருண்டைகளை காகத்திற்கு வைக்கவும். இதன் மூலம் குழந்தைக்கு இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கி நன்றாக சாப்பிட ஆரம்பிக்கும் என்பது நம்பிக்கை.

டிப்ஸ் 3:

குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து, உங்களுக்கு தெரிந்த, வயதில் மூத்த பெண்மணியை அழைத்தோ, அல்லது குழந்தையின் தாயோ கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். சனி, ஞாயிறுகளில் இதை செய்வது நல்லது. குழந்தை வழக்கமாக சாப்பிடும் கிண்ணத்தில் நீர் நிரப்பி அருகில் வைத்துக் கொள்ளவும். இப்போது உங்கள் கைகளால் குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை வருடிக்கொண்டே இந்த மந்திரத்தை உச்சரிக்கவும்.

baby-eating3

மந்திரம்:

ஓம் உவ்வும் சவ்வும் ஐயும் கிலியும் ஸ்வாஹா!!

சகலதிருஷ்டியும் நசிநசி ஸ்வாஹா!!

ஸ்வாஹா.. என்று சொல்லும்போது அந்த தண்ணீரில் கையை நனைக்கவும். ஸ்வாஹா என்பது தீய சக்திகளை அந்த நீரில் இறக்குவதாக அர்த்தம். பின்னர் அந்த நீரை வாசலில் ஒரு ஓரமாக கொட்டி விடவும் கையை கழுவிவிட்டு உள்ளே செல்லவும்.

baby-eating4

எப்போதும் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது அனைவருக்கும் தெரியும்படி தட்டில் வைத்து ஊட்டுவதை விட ஒரு சிறிய கிண்ணத்தில் ஊட்டுவது தான் நல்லது. முதலில் சிறிதளவு அதில் எடுத்துக்கொண்டு ஊட்டவும். காலியானதும் மீண்டும் சிறிது போட்டு எடுத்து வரலாம். மொத்தமாக எடுத்துக் கொண்டு வருவதை தவிர்ப்பதன் மூலம் மற்றவர்களுக்கு குழந்தை எவ்வளவு சாப்பிடுகிறது என்று தெரியாது. இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். கட்டாயம் சாப்பிட அடம் பிடிக்கும் உங்கள் செல்ல குழந்தை மெல்ல மெல்ல நன்றாக சாப்பிட துவங்கும். உங்களின் கவலையும் நீங்கும்.