Skip to main content

என்ன செய்தாலும் முடி உதிர்வு நிற்கவில்லையா? முடி வளரவில்லையா? இதோ தீர்வு!

என்ன செய்தாலும் முடி உதிர்வு நிற்கவில்லையா? முடி வளரவில்லையா? இதோ தீர்வு!

அந்த காலங்களில் எல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்கு தான் முடி உதிர்வு ஏற்படும். சொல்லப்போனால் வயது முதிர்ந்தாலும், நரைமுடி வருமே தவிர பெருசா வழுக்கை ஒன்றும் விழாது. ஆனால் காலம் மாறிவிட்டது. வளர்ந்து வரும் இந்த கால கட்டத்தில், நம்முடைய உடல் சூழ்நிலையும் மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த முடி உதிர்வு பிரச்சனை, ஒரு பெரிய பிரச்சனை தான்.

hair-fall

வீட்டை கூட்டி சுத்தம் செய்தால் குப்பை வருகிறதோ இல்லையோ? அந்த குப்பையில் முடி தான் வரும். முடி உதிர்வு பிரச்சனை இன்றைய சூழ்நிலையில் எல்லோருக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக தான் இருந்து வருகிறது. இதற்கு தீர்வே கிடையாதா! என்று, புலம்பி கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பதிவின் மூலம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கப்போகிறது.

முடி உதிர்வுக்கான முதல் காரணம் மன அழுத்தம். அதிகப்படியான வேலைப்பளு, டென்ஷன் காரணமாகவும், அதிகப்படியாக மூளையை கசக்கி சிந்திப்பதன் மூலமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது. அதன்பின்பு, நம்முடைய சுற்றுச்சூழல் மாசு. இந்த சுற்றுச்சூழலின் மூலம் தலைமுடி அதிகமாக பாதிப்பு அடைகிறது. அடுத்ததாக நாம் குளிக்கின்ற தண்ணீர். சில பேருக்கு தண்ணீர் மாறினால் கூட தலையிலிருந்து முடி உதிரும். இப்படியாக முடி உதிர்வுக்கு பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். எது எப்படியாக இருந்தாலும், முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்ய இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்.

onion

அந்த பொருள் சின்னவெங்காயம். சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பர் என்னும் வேதிப்பொருள் முடிஉதிர்வை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. முதலாவதாக இந்த சின்ன வெங்காயத்தில் இருக்கும் சாறை எடுத்து, 5 நிமிடங்கள் தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு, முடி உதிர்வு கட்டுப்படுத்தப்பட்டு, முடி அடர்த்தியாக வளர வழிவகை செய்கிறது.

அதாவது நாம் தலையில் தேய்க்கும் எண்ணெய்க்கு பதிலாக, எந்தவித செயற்கையான கலப்படமும் இல்லாத, இந்த சின்ன வெங்காய சாற்றினை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, மிக்ஸியில் போட்டு அரைத்து, பிழிந்து எடுத்தால் சின்ன வெங்காய சாறு கிடைத்துவிடும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். இதை எண்ணைக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

hair-fall1

அடுத்ததாக, சின்ன வெங்காயத்தை எடுத்து வெண்ணீரில் போட்டு, வேக வைத்து அதன் பின்பு அதிலிருந்து சாறை வடிகட்டி எடுத்து, அந்த நீரினை தலையில் நன்றாக மசாஜ் செய்து ஊற வைத்து, ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளித்து விட்டால் போதும். ஒரே மாதத்தில் பாருங்கள்! உங்களது முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளரும். முடி உதிர்வு பிரச்சினைக்கு இந்த சின்ன வெங்காயம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.