Advertisement

உதடு வெடிப்பு நீங்கி உதடு பளபளக்க கை வைத்தியம்

உதடு வெடிப்பு நீங்கி உதடு பளபளக்க கை வைத்தியம்

தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இது அணைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற பொதுவான ஒரு பாதிப்புதான். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.

lips problem

குறிப்பு 1 :

தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.

குறிப்பு 2 :

நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.

honeyகுறிப்பு 3 :

உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும் இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

குறிப்பு 4 :

காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகள் குணமாக நல்லெண்ணெய்யையோ, நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.

rose

குறிப்பு 5 :

எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.

கோடைகாலத்தில் கை கொடுக்கும் பாட்டி வைத்திய குறிப்புக்கள்

கோடைகாலத்தில் தகிக்கும் சூரியக்கதிர்களால் மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிர்களும் இக்காலத்தில் அவதியுறுகிறோம். இக்காலத்தில் மனிதர்கள் நாம் நம் உடல்நலத்தையும் அதன் தட்பவெப்பத்தையும் சரியான விகிதத்தில் பேணிக்காப்பது அவசியமாகும். அதற்கான நம் மண்ணின் பாரம்பரிய மருத்துவக்குறிப்புகள் சிலவற்றை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

sunny

குறிப்பு 1 :

குளிர்சாதன பெட்டி கொண்டு குளிர்விக்கப்படும் நீரை தவிர்த்து நம் பாரம்பரிய மண்பானை நீரை அதிகம் குடியுங்கள். இதன் மூலம் நமது உடலுக்கு குறிர்ச்சி கிடைக்கும். அதோடு பானை தயாரிப்பவர்களுக்கு சிறு வருமானமும் கிடைக்கும்.

குறிப்பு 2 :

ஒரு குடத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு மல்லிப்பூவை ஊறவைத்து அந்த நீரை பருகலாம். இதன் மூலமும் உடல் நன்கு குளிர்ச்சியடையும். ஆனால் இந்த நீரை அதிகம் பருகுவதால் சலி பிடிக்க வாய்ப்புண்டு.

malligai poo

குறிப்பு 3 :

கோடைகாலத்தில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேற வாய்ப்புண்டு. இதன் காரணமாக நம் ரத்தத்தில் உப்பிழப்பு ஏற்படலாம். இதனை தவிர்க்க சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரை அடிக்கடி குடிக்கலாம்.

குறிப்பு 4 :

கோடைகாலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் வியர்க்குரு, சிறு கட்டிகள் போன்றவை வர வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க அரைத்த சந்தனத்தை பூசிக்கொள்ளலாம்.

malligai poo

குறிப்பு 5 :

வெயில் காலத்தில் நமது மனம் நிழலை தேடுவது இயல்பு. எப்போதும் AC அறையிலே இருக்காமல் வேப்ப, புங்க மரங்களின் நிழல்களில் முடிந்த அளவிற்கு இளைப்பாருங்கள் இதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்வுகொள்ளும்.