Advertisement

கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம் உங்களது அழகை குறைகின்றதா? அப்போ உடனே இதை பண்ணுங்க!

கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம் உங்களது அழகை குறைகின்றதா? அப்போ உடனே இதை பண்ணுங்க!

நம்மில் பல பேருக்கு முகம் வெள்ளை நிறமாக அழகாக இருந்தாலும், கழுத்துப் பகுதி மட்டும் கருப்பு நிறம் நிறைந்ததாக இருக்கும். உடல் முழுவதும் மாநிரத்திலிருந்து, கழுத்து, சற்று கருப்பு நிற தோற்றத்தில் இருந்தாலும் அவ்வளவாக வெளியில் தெரியாது. ஆனால் சிலபேருக்கு கழுத்தில், கருமை நிற வர்ணம் பூசியது போல் பளிச்சென்று வெளியில் தெரியும் இந்த பிரச்சனை பாடாய் படுத்தி எடுக்கும். அழகு என்பது வெறும் வெளித்தோற்றத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமல்ல. தன்னம்பிக்கையை அதிகமாகும் ஒரு தன்மையும் இந்த அழகுக்கு உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் அழகை சற்று கூட்டிக் கொண்டால் என்ன தவறு இருக்கிறது? உங்களுக்கும் கழுத்தில் கருநிற சரும பிரச்சனை உள்ளதா? அதற்கான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

honey lemon sugar

தேன், எலுமிச்சை, சர்க்கரை இந்த மூன்று பொருட்களுக்கும் சருமத்தை அழகாக்கும் தன்மை அதிகமாகவே உள்ளது. ஆகவே தேன் ஒரு சிறிய மூடி அளவு, எலுமிச்சைசாறு ஒரு சிறிய மூடி அளவு, சர்க்கரை 1/2 ஸ்பூன், என்ற அளவில் ஒன்றாகக் கலந்து கழுத்துப்பகுதியில் போட்டு தினம்தோறும் பத்து நிமிடங்கள் வரை லேசாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி செய்யலாம். ஒரு வாரத்திலேயே நல்ல பலன் உள்ளதை உங்களால் கண்கூடாக காணமுடியும். இந்த முறையை கை முட்டி, கால் முட்டி போன்ற இடங்களில் ஏற்படும் கருமை நிறம் மாறுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து, இரவுநேரங்களில் கழுத்தில் போட்டு பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விட்டு, அப்படியே தூங்கி விடவேண்டும். மறுநாள் காலை அதை கழுவிக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து செய்து வர 10 நாட்களில் கருமை நிறம் முழுமையாக உங்கள் கருத்தை விட்டுப் போய்விடும். இந்த கற்றாழைக்கு குளிர்ச்சி தன்மை அதிகம். அடிக்கடி சளி காய்ச்சல் வருபவர்கள் பகலிலேயே இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதே முறையை கை முட்டி, கால் முட்டி கருமை நிறம் மாறுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

katralai

சிலபேர் பார்ப்பதற்கு ரோஜா பூ போல அழகாக மென்மையான சருமத்தை கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் வெயிலில் சென்றால் போதும் சூரியனின் வெப்பம் பட்டு முகம் உடனே கருநிறமாக மாறிவிடும். சன் டேன் என்று சொல்லுவார்கள் அல்லவா? அதாவது உடம்பில் சூரியனின் ஒளி நேரடியாக படும் பாகம் ஒரு நிறமாக இருக்கும். சூரிய ஒளி படாமல் இருக்கும் பகுதி ஒரு நிறமாக இருக்கும். சூரியனின் ஒளி பட்டு நம்முடைய சருமம் கருமை நிறம் அடைந்தால், அந்த இடங்களில் எல்லாம் ஆலிவ் எண்ணையை போட்டு நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊற வைத்து, அதன் பின் குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் சூரிய ஒளி கதைகளின் மூலம் நம்முடைய சருமம் பாதிப்படையாமல் இருக்கும்.

சில பேருக்கு முகத்தில் இருக்கும் தோலின் நிறத்திற்கும், கழுத்தில் இருக்கும் தோலின் நிறத்திற்கு வித்தியாசம் தெரியும். கரு நிறம் இருக்காது. ஆனால் முகத்தில் இருக்கும் நிறத்தை விட கழுத்துப்பகுதி நிறம் சற்று மாறி இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஆலிவ் ஆயிலுடன், லெமன் ஜூஸ் சேர்த்து மசாஜ் செய்யவேண்டும். ஆலிவ் ஆயில் ஒரு மூடி எடுத்துக்கொண்டால், லெமன் ஜூஸையும் ஒரு மூடி எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டையும் சம அளவு சேர்த்து தினந்தோறும் மசாஜ் செய்து வந்தால் உங்களது முகம் எந்த நிறத்தில் இருக்கிறதோ, அதே நிறத்தில் உங்களது கழுத்துப்பகுதியும் மாறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

elumichai lemon

முகம் கை கால் சருமம் எல்லா இடங்களிலும் சில சமயங்களில் அழுக்கு நிறைய சேர்ந்து இருக்கும். அதாவது தினமும் குளித்து வந்தாலும் கூட, வெளியில் சுற்றித் திரியும் சமயங்களில், வீட்டில் இருந்தாலும் கூட வியர்வை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட சமயத்தில், எலுமிச்சைச்சாறு எந்த அளவு எடுத்துக்கொள்கிறீர்களோ, அதே அளவு தண்ணீரை அந்த எலுமிச்சைச் சாறுடன் கலந்து அந்த தண்ணீர் மூலம் உடல் முழுவதும் நன்றாக மசாஜ் செய்து குளித்தால் உடம்பில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதாவது சுற்றுச்சூழலில் மாசுபாட்டால் உடலில் சேர்ந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.