Skip to main content

Posts

Showing posts from July, 2021

வாயில்லா ஜீவனை தொடர்ந்து சீண்டியதால் பலியான இளைஞர் !!

வாயில்லா ஜீவனை  தொடர்ந்து சீண்டியதால் பலியான இளைஞர் !! கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள். A human lost his life. I wonder whom to blame. pic.twitter.com/KQVGzRq0Ca — Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 26, 2021

வெஜிடபிள் பிரியாணி - Vegetable Biryani By Amma Samayal.

வெஜிடபிள் பிரியாணி தேவையானவை:  பாசுமதி அரிசி - 2 கப்,  பெரிய வெங்காயம் - 2,  தக்காளி - 3,  கேரட் - 1,  உருளைக்கிழங்கு - 1,  பட்டாணி - ஒரு கைப்பிடி,  புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.  வெஜிடபிள் பிரியாணி -  Vegetable Biryani By Amma Samayal அரைக்க:  சின்ன வெங்காயம் - 10,  இஞ்சி - ஒரு துண்டு,  பூண்டு - 6 பல் (சிறிய பூண்டாக இருந்தால் 8 பல்),  காய்ந்த மிளகாய் - 3,  தனியா - 2 டீஸ்பூன்,  பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,  சீரகம் - அரை டீஸ்பூன்,  தயிர் - அரை கப்,  கசகசா - ஒரு டீஸ்பூன்.  தாளிக்க:  பிரிஞ்சி இலை - சிறிதளவு,  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,  நெய் - 2 டேபிள்ஸ்பூன்.  செய்முறை:  அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுங்கள். காய்கறிகளை வெஜிடபிள் பிரியாணிக்கு சொன்னது போலவே நறுக்குங்கள். வெங்காயத்தை நீளவாக்கிலும் தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதங்கியதும், அத்துடன் பச்சை மிளகாய் மற

மாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.

மாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க... மாம்பழம் சாப்பிட்டதும் தப்பித்தவறியும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க. கோடைக்காலம் என்றாலே வெயிலுக்கு அடுத்தப்படியாக நினைவிற்கு வருவது மாம்பழங்கள் தான். இந்தியாவில் பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் உலகிலேயே அதிக வெரைட்டியான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுவது இந்தியாவில் தான். ஆகவே கோடைக்காலத்தில் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விலை குறைவில் விற்கப்படுவதைக் காணலாம். மாம்பழங்கள் விலை குறைவில் கிடைப்பதால், பலரும் தங்கள் வீடுகளில் மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவார்கள். பழங்களின் ராஜாவும், இந்தியாவின் தேசிய பழமுமான மாம்பழம், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள் கொண்டது. மாம்பழங்களைக் கொண்டு பல்வேறு சுவையான ரெசிபிக்களை செய்யலாம். என்ன தான் மாம்பழம் ஒரு ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், மாம்பழத்தை சாப்பிட்டதும் ஒருசில உணவுகளை சாப்பிட்டால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கீழே மாம்பழம் சாப்பிட்ட பின் சாப்பிடக்கூடாத சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தண்ணீர்  மாம்பழம் சா

புதினா 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க Tips.

ஃப்ரெஷ் புதினாக் கீரை 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க வழி இருக்கு! கையில் எடுக்கும்போதே வாசனையில் நம்மை கட்டிப்போடும் அளவிற்கு மிகுந்த மனம் வீசும் பண்பு கொண்டது புதினா. Mint Safety Tips In Tamil : மனிதனுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் முக்கிய உணவுகளில் ஒன்று கீரைகள். நாள்தோறும் கீரைகளை உணவில் சேர்த்கொண்டால் நோய் இல்லாமல் வாழலாம் என்பது நம் முன்னோர்கள் கூறியது. அதே வார்த்தையை தற்போது மருத்தவர்களும் கூறி வருகின்றனர். பழங்காலம் முதற்கொண்டு தற்போதுவரை அனைவரும் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்துவதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் கீரையில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று… புதினா 10 நாள் கெட்டுப் போகாமல் இருக்க Tips. ஒவ்வொரு கீரைக்கும் ஒருவகையான தனித்தன்மை உண்டு. அந்த வகையில் கையில் எடுக்கும்போதே வாசனையில் நம்மை கட்டிப்போடும் அளவிற்கு மிகுந்த மனம் வீசும் பண்பு கொண்டது புதினா. இயற்கை மருத்துவத்தில் புதினாவிற்கு தனி இடம் உண்டு. இதில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நமது உணவில் தினமும் புதினா இலைகளை சேர்த்து வரும்போது, ஜீரண பிரச்சனைகள், வயிற்றுக

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுக்கு மல்லி காஃபி பொடி : எப்படி அரைப்பது..?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுக்கு மல்லி காஃபி பொடி : எப்படி அரைப்பது..? இது சளி, இருமல், தொண்டை வலி, தலை வலி, அதிகப்படியாக டென்ஷன் போன்ற சமயங்களில் சுட சுட பாலின் கலந்து குடிக்க அனைத்தும் சரியாகும். சுக்கு மல்லி காஃபி பொடியானது பாரம்பரியமாக பின்பற்றி வரும் ஒரு வகை மசாலா பானமாகும். இது சளி, இருமல், தொண்டை வலி, தலை வலி, அதிகப்படியாக டென்ஷன் போன்ற சமயங்களில் சுட சுட பாலின் கலந்து குடிக்க அனைத்தும் சரியாகும். இதை வீட்டில் தயாரிப்பதும் எளிதான காரியம்தான். எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :  சுக்கு – 15 கிராம் மிளகு – 1 tsp ஏலக்காய் – 3 மல்லி – 2 tsp செய்முறை : மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக கடாயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாகும் வரை மைய அரையுங்கள். அவ்வளவுதான் சுக்கு மல்லி காஃபி பொடி தயார். இதை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை பாலில் கொதிக்க வைத்து குடிக்கலாம். தண்ணீரில் கலந்தும் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இதைக் குடிப்பதால் சளி, இருமல், தொண்டை வலி குணமாகும்.    

Cloves : கிராம்பில் இத்தனை நன்மைகள் இருக்கா..? மிஸ் பண்ணாமல் தினமும் இரண்டு சாப்பிட்டு வாருங்கள்..!

Cloves : கிராம்பில் இத்தனை நன்மைகள் இருக்கா..? மிஸ் பண்ணாமல் தினமும் இரண்டு சாப்பிட்டு வாருங்கள்..! கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது. நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவிலாவது சேர்க்க மறவாதீர்கள். நோய் எதிர்ப்பு சக்தி :  கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலை எந்த நோய்த்தொற்றுகளும் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். அதோடு நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது. செரிமாணம் :  ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டும். அதற்கு காலையில் கிராம்பை உட்கொள்வது செரிமான பிரச்சினைகளுக்கு உதவும். கிராம்பு செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறத. எனவே மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பு நார்ச்சத்து நிறைந்தது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. கல்லீரல் ஆரோக்கியம் :  கல்லீரல் தான் உங்கள் உடலை நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை மெட்டபாலிசம் செய்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாட

ஆரோக்கியமான காலை உணவுக்கு ஆப்பம்; இப்படி மாவு அரைச்சு பாருங்க!

ஆரோக்கியமான காலை உணவுக்கு ஆப்பம்; இப்படி மாவு அரைச்சு பாருங்க! Tasty Aappam Recipe : காலை உணவுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆப்பம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்போமா? தமிழகர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று ஆப்பம். அரிசி மாவில் செய்யப்படும் இந்த உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். இதன் தோற்றம் தோசை போலவே இருந்தாலும் தோசைக்கு நிகரான சுவையும், ஆரோக்கிய நன்மைகளும் தரக்கூடியது ஆப்பம். இந்த ஆரோக்கியம் நிறைந்த ஆப்பத்தை சுவையாக செய்வது எப்படி என்பதை பார்போமா? தேவையான பொருட்கள் : இட்லி அரிசி – ஒரு கப் பச்சை அரிசி – 2 கப் துருவிய தேங்காய் – ஒரு கப் வெந்தயம் – ஒரு ஸ்பூன் ஊளுந்து – ஒன்னரை டேபிள் ஸ்பூன் சர்க்கரை – அரை டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் – சிறிதளவு ஆப்ப சோடா – சிறிதளவு சோடா வாட்டர் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில், இட்லி அரிசி பச்சை அரிசி, ஒளுந்து வெந்தயம் ஆகியவற்றை நன்றாக 4 மணி நேரம் ஊறவைத்து,துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக ஆட்டிக்கொள்ளவும். அடுத்து இந்த மாவில், தேங்காய் பால் சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து விட்டு மாவை 8 மணி நேரம் புளிக்கவை