Advertisement

ஒருமுறை இதை உங்களது முகத்தில் தடவினால், உங்களுக்கு ஒரு வயது குறையும். தினம் தினம் உங்களை இளமையாக மாற்றப்போகும் இந்த ரகசிய குறிப்பை மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்க.

ஒருமுறை இதை உங்களது முகத்தில் தடவினால், உங்களுக்கு ஒரு வயது குறையும். தினம் தினம் உங்களை இளமையாக மாற்றப்போகும் இந்த ரகசிய குறிப்பை மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்க.

ஒரு நாளை நாம் கடக்கும் போது நம்முடைய வயது கூடிக் கொண்டே செல்கின்றது. வயது கூடிக் கொண்டே சென்றாலும் நம்முடைய இளமையை நாம் நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக் கொள்ள, முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கத்தை குறைத்துக் கொண்டு வந்தாலே போதும். நம்முடைய அழகு கெட்டுப் போகாது. எப்போதும் இளமையாக இருக்கலாம். நீங்கள் நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுடைய முகம் கை கால்களில் சுருக்கமே இருக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா? மிக சுலபமான மலிவான ஒரு குறிப்பை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம் எல்லோர் வீட்டு சமையலறையிலும் இருக்கக்கூடிய விலை குறைவாக கிடைக்கக்கூடிய வெந்தயத்தை வைத்து தான் இந்த டிப்ஸ் சொல்லப்பட்டுள்ளது. முறைப்படி இதை செய்து வந்தால் தினம் தினம் உங்களுக்கு வயது குறைந்து கொண்டே போகும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு முறை ட்ரை பண்ணி பார்த்துட்டு, ரிசல்ட் எப்படி இருக்கு செக் பண்ணிட்டு, நீங்க தொடர்ந்து யூஸ் பண்ணிக்கலாம்.

இந்த பேசியல் செய்ய தேவையான பொருட்கள். வெந்தயப் பொடி – 1 ஸ்பூன், புளிக்காத தயிர் – 2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1/2 ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன், அவ்வளவு தான். நல்ல வெந்தயப் பவுடர் கடைகளில் கிடைத்தால் வாங்கிக்கொள்ளலாம். இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்த வைத்துக் கொள்ளுங்கள்.

Curd (Thayir)

ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வெந்தய பொடி, தயிர், லெமன் ஜூஸ், ரோஸ் வாட்டர், தேன் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 2 ஓட்டு ஓட்டி கொள்ள வேண்டும். இது வழுவழுப்பான பேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். இதை ஒரு பவுலில் மாற்றிக் கொண்டு உங்களுடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவிக் கொள்ளுங்கள். முகம் தவிர கை கால்களிலும் இந்த பேக்கை போட்டுக்கொள்ளலாம்.

இந்த ஃபேஸ் மாஸ்க்கை போட்டுக் கொண்டு ஃபேனுக்கு அடியில் அமர வேண்டாம். முகத்தில் இந்த ஃபேஸ் மாஸ்க் இருக்க பிடிக்கும் வரை நிறைய உலர வைத்து விடாதீர்கள். 80% இந்த ஃபேஸ் மாஸ்க்க் முகத்தில் காய்ந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் 80 சதவிகிதம் உலர பொதுவாக பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் எடுக்கும். ஃபேன் காற்றில் அமர்ந்தால் சீக்கிரம் காய்ந்து விடும் அல்லவா?

face1

தினமும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பார்க்கலாம். ஒரு முறை போட்ட உடனேயே உங்களுடைய முகத்தில், நன்றாக வித்தியாசம் தெரியும். முகம் வழுவழுப்புத் தன்மையை பெற்றிருக்கும். அந்த அளவிற்கு சக்தி கொண்டது இந்த வெந்தயப்பொடி, பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. குறிப்பாக வறட்சியான சருமத்தில் அதிகப்படியான சுருக்கத்தை கொண்டவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக உதவியாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.