Skip to main content

Posts

Showing posts from December, 2021

அழுதால் நல்லதா? கெட்டதா? அழுகையை பற்றி ஆன்மீகமும், அறிவியலும் கூறும் ஆச்சரியமூட்டும் உண்மைகள்!

அழுதால் நல்லதா? கெட்டதா? அழுகையை பற்றி ஆன்மீகமும், அறிவியலும் கூறும் ஆச்சரியமூட்டும் உண்மைகள்! பெண்களையும் அழுகையையும் பிரிக்கவே முடியாது என கூறலாம். அதிக அளவு சந்தோஷமாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி உடனே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்துவிடும். இது கடவுளால் படைக்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம். இது பெண்ணுக்கு மட்டுமே உரிய விஷயம் இல்லை என்றாலும், 90% பெண்களுக்கு மட்டுமே உடனடியாக அழுகை உண்டாகிறது. சரி, அழுவது சரியா? தவறா? நல்லதா? கெட்டதா? என்பதைப் பற்றி ஆன்மீகமும், அறிவியல் என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். சிறு சிறு விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் ஆண்கள்! அதேபோல் சிறு சிறு விஷயங்களுக்கும் உடைந்து போய் அழுது விடுபவர்கள் பெண்கள்! இந்த இரண்டில் எது சரி? என்று கேட்டால் பாதிக்கு பாதி பதில் வரும். ஆனால் ஆழ்ந்து யோசித்தால் நீங்களே உங்கள் தலையில் கொட்டிக் கொள்ள வேண்டி வரும். என்ன? ஆமாம் தானே? இந்த பொண்ணுகளே இப்படி தான்பா.. சரியான அழுமூஞ்சி. இவங்க எதற்கெடுத்தாலும் அழுக்காச்சி படம் போட்டுக் காட்ட வேண்டியது! என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் அதிக ஆண்க

பெண்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், 5 சின்ன சின்ன தவறுகள்! அது என்னென்ன தவறுகள் என்று நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

பெண்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், 5 சின்ன சின்ன தவறுகள்! அது என்னென்ன தவறுகள் என்று நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? பெண்களுக்கு ஆரோக்கியத்தில் ஏற்படக் கூடிய பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது, நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் தான்! அதில் குறிப்பிட்டு சொல்ல போனால், நாம் செய்யும் 5 தவறுகள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த 5 தவறுகளை சரிசெய்து விட்டாலே, பெண்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து விடலாம். அது என்னென்ன தவறுகள் என்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த 5 தவறுகளை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, பெண்கள் எப்போதுமே ‘நம்மை கவனிப்பதற்கு யாரும் இல்லையே, ஒருவேளை சாப்பிட்டாயா? என்று கூட யாரும் கேட்பதில்லை! நம் வீட்டில் உள்ள உறுப்பினர்களை நாம் எவ்வளவு அக்கறையோடு கவனித்துக் கொள்கின்றோம்? ஆனால், பதிலுக்கு நம்மை யாரும் அக்கறையோடு கவனிக்கவே இல்லையே’ என்ற எண்ணம் எந்த ஒரு பெண்ணிற்கு வரக்கூடாது. மற்றவர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்ளும் பெண்ணுக்கு, தன்னைத்தானே அக்கறையோடு பார்த்து

வெறும் 5 ரூபாயில் நீங்கள் எப்படி இருந்தாலும் அழகாகலாம்!

வெறும் 5 ரூபாயில் நீங்கள் எப்படி இருந்தாலும் அழகாகலாம்! ஆண், பெண் என வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை தான். சிலர் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது முகத்தில் முகப்பருவும், பருக்கள் இருந்த அடையாளமும் முக அழகை கெடுத்து கொண்டிருக்கும். வெயிலில் சுற்றி சுற்றி கருமை படர்ந்து, உடலில் வெயில்படும் இடங்களில் மட்டும் கருமையாக ஒரு சிலருக்கு மாறி இருக்கும். அவர்களும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம். இந்த பிரச்சனைகளை வெறும் 5 ரூபாய் செலவில் நமது வீட்டிலேயே சரி செய்வதற்கு அற்புதமான டிப்ஸ் உள்ளது. அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். கருப்பாக இருப்பவர்கள், முழங்கை மற்றும் முழங்கால் பகுதியை வெள்ளையாக மாற்ற நினைப்பவர்கள், அழகாக இருந்தாலும் முகத்தில் இருக்கும் தழும்புகளை பிரச்சினையாக நினைப்பவர்கள் இதை முயன்று பார்க்கலாம். இது போல் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும். நீங்களே வித்தியாசத்தை உணர ஆரம்பித்து விடுவீர்கள். அதன் பின் உங்களது பிரச்சினை தீரும் வரை தொடர்ந்து இதனை செய்து வரலாம். இதற்கு தேவையான பொருட்கள

இந்த சாதாரண பூக்களுக்குள் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

இந்த சாதாரண பூக்களுக்குள் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே! நாம் எந்த பூவாக இருந்தாலும், அதை தலையில் சூடிக் கொள்ளவும், வெறும் அழகிற்காகவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் மலரும் ஒரு மூலிகை தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு மருத்துவ பயனை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. சாதாரண பூக்கள் முதல், விலை உயர்ந்த பூக்கள் வரை ஒவ்வொரு பூக்களும் நம்முடைய வாழ்க்கையில் சாதாரண பிரச்சினையைக் கூட மிக எளிதாக தீர்த்து விடும். பூக்களுக்குள் இவ்வளவு நன்மைகள் இருப்பதை நாம் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். அப்படி சில பூக்கள் நமக்கு என்னென்ன நன்மைகள் தரும்? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாக சந்தித்துக் கொண்டு இருப்பது தூக்கமின்மை பிரச்சனை தான். எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில் தூங்கி விட முடிவதில்லை. இது மிகப்பெரிய சாபமாக நமது வாழ்வில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை மிக எளிதாக தீர்க்கக்கூடிய பூ ஒன்று உள்ளது. அது

முகத்தில் இருக்கும் கிருமிகளை வேரோடு நீக்க பார்லர் போகாமல் வீட்டிலேயே ‘கிளேன்சிங்’ செய்வது எப்படி?

முகத்தில் இருக்கும் கிருமிகளை வேரோடு நீக்க பார்லர் போகாமல் வீட்டிலேயே ‘கிளேன்சிங்’ செய்வது எப்படி? நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலை, காற்று மாசு ஆகியவை நம் முகத்தில் தீவிரமான பாதிப்பை உண்டாக்குகின்றன. வெளியில் கிளம்பும் பொழுது மிகவும் ப்ரெஷாக தான் கிளம்புவோம். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பிரகாசம் நம் முகத்தில் இருந்து காணாமல் போய்விடும். இதற்கு காரணம் காற்றில் இருக்கும் நுண்கிருமிகள் நமது முகத்தில் படிந்து அசுத்தத்தை உண்டாக்குகின்றன. அதனால் முகத்தை அடிக்கடி கிளன்சிங் செய்வது மிகவும் முக்கியம். அதை பார்லர் போய் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நம்முடைய வீட்டிலேயே எளிமையாக, நம்முடைய சமையலறையில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே, நாமே செய்து கொள்ள முடியும். அதை எப்படி செய்வது? அதற்கு தேவையான பொருட்கள் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். முகத்தில் இருக்கும் நுண்கிருமிகள் மற்றும் மாசுக்களை நீக்க அடிக்கடி முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவது தேவையற்றது. சோப்பு அடிக்கடி பயன்படுத்தினால் அதில் இருக்கும

அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ள, பார்ப்பதற்கு பலபலன்னு இருக்க, இவ்வளவு ஈஸி டிப்ஸா? காசு கூட நிறைய செலவாகாது. இந்த 2 பொருள் போதும்.

அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ள, பார்ப்பதற்கு பலபலன்னு இருக்க, இவ்வளவு ஈஸி டிப்ஸா? காசு கூட நிறைய செலவாகாது. இந்த 2 பொருள் போதும். இளம் வயதில் இருக்கும் நிறைய பெண்களுக்கு, தங்களுடைய அழகை பாதுகாத்து கொள்வதற்கு, தங்களுடைய அழகை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. நேரத்தை மிச்சப்படுத்தியெல்லாம் உங்களை அழகு படுத்திக் கொள்ள முடியவில்லையா, உங்களுக்கான ஈஸியான டிப்ஸ் தான் இது. இந்த கலவை 1 மாதத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் கூட வைக்க வேண்டாம். இயற்கையான இந்த இரண்டு பொருட்களை வைத்து, உங்களை எப்படி அழகுபடுத்திக் கொள்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா. இதுக்கு தேவையான பொருள் அரிசி மாவு 1/2 கப் அளவு, பீட்ரூட் அல்லது கேரட் தேவைப்பட்டால் இரண்டையுமே எடுத்துக் கொள்ளலாம். பீட்ரூட் என்றால் அதில் பாதி அளவு வெட்டி எடுத்து, துருவிக் கொள்ள வேண்டும். துருவிய பீட்ரூட்டை பிழிந்தாலே நமக்கு நான்கிலிருந்து ஐந்து டேபிள் ஸ்பூன் அளவு பீட்ரூட் சாறு கிடைத்து விடும். தண்ணீர் ஊற்றி ஜூஸ் எடுக்கக் கூடாது. பீட்ரூட்டில் இருந்து வரக்கூடிய தண்ணியை, மட்டுமே பிழிந்து ஜூஸ

வாழ்நாள் முழுவதும் இளமையோடு, ஆரோக்கியத்தோடு, அழகாக இருக்க வேண்டுமா?

வாழ்நாள் முழுவதும் இளமையோடு, ஆரோக்கியத்தோடு, அழகாக இருக்க வேண்டுமா? இன்றிலிருந்தே இதை குடிக்க தொடங்குங்கள்! இந்த பதிவில் கொடுக்கப்போகும் குறிப்பை பார்த்து விட்டு, இதை குடிக்க காசு நிறைய செலவாகுமே, என்று பயந்து விடாதீர்கள்! ஏனென்றால், உடல்நிலை சரியில்லாமல் போனால், லட்ச லட்சமாக மருத்துவமனைக்கும், மருந்து வாங்குவதற்கும் காசு செலவு பண்ணுவதற்கு நமக்கு மனசு வரும். ஆனால், ஆரோக்கியமான உணவை வாங்கி சாப்பிடுவதற்கு வரவு செலவு கணக்கை நாம் பார்ப்போம். மருத்துவமனைக்கு செல்லக்கூடாது, ஆரோக்கியமாக வாழ வேண்டும். நன்றாக உழைத்து சம்பாதிக்க வேண்டும், என்று நினைத்தால் இந்த ஒரு குறிப்பை பின்பற்றினாலே போதும். உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் வராது. வாழ்நாள் முழுவதும் தோல் சுருக்கம் விழாமல், அழகாக, இளமையாக இருக்கலாம். பாதாம் பருப்பு, இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உடல் எடையும் அதிகம் கூடாது. அதே சமயம் கால்சியம் சத்து அதிகரிக்கும். பாதாம்பருப்பை எந்த முறையில் தினந்தோறும் நம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அழகு குறையாமல் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உங்கள் முகம் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா?

உங்கள் முகம் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? ஒருமுறை, இதை போட்டாலே முகம், தங்க நிறத்தில் பளபளப்பாக மாறும். எல்லா பெண்களுக்கும் தங்களுடைய முகம் தங்கம் போல ஜொலிக்க வேண்டும். பளபளப்பாக இருக்க வேண்டும், என்ற எண்ணம் தான் இருக்கும். நம்முடைய அழகை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக, செயற்கையான முறையில் க்ரீம், ஜெல் இவைகளை பயன்படுத்துவதை விட இயற்கையாக இருக்கும் பொருட்களை வைத்து நம்முடைய சருமத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். அந்த வரிசையில் இயற்கையான பொருட்களை வைத்தே சொல்லப்பட்டுள்ள, ஒரு குறிப்பு தான் இது. ஒரு வாட்டி இத ட்ரை பண்ணி பாருங்க. ஒரு முறை போட்ட உடனேயே, உங்களது சருமத்தின் நிறத்தில் வித்தியாசம் கட்டாயமாக தெரியும் என்பதில் சந்தேகமே கிடையாது. இதற்கு நம் வீட்டிலேயே ஒரு ஃபேஸ் பேக் தயாரிக்க போகின்றோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். பாதி அளவு கேரட், 4 துண்டு வெள்ளரிக்காய், காய்ச்சாத பால் 2 ஸ்பூன், வெள்ளை சர்க்கரை 2 ஸ்பூன், தக்காளி பாதி அளவு, இவைகளை ஒன்றாக சேர்த்து விழுது போல் அரைத்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். அப்படியே அரைத்தாலே, சர்க்கரையும், வெள்ளரிக்காயும், தக்காளியும் சேர

முடி உதிர்வை கட்டுப்படுத்தி, அடர்த்தியாக, விரைவாக, முடியை வளரச் செய்ய, இதை விட சுலபமான எண்ணையை யாராலும் தயார் செய்ய முடியாது.

முடி உதிர்வை கட்டுப்படுத்தி, அடர்த்தியாக, விரைவாக, முடியை வளரச் செய்ய, இதை விட சுலபமான எண்ணையை யாராலும் தயார் செய்ய முடியாது. ஒருவருடைய தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும், அழகாகவும், இருக்கும்பட்சத்தில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுடைய அழகு கொஞ்சம் அதிகமாகத்தான் தெரியும். ஒருவருடைய அழகுக்கு முக்கிய பங்கு வகிப்பது தலையில் இருக்கும் முடியும் தான். அந்த முடியை கருமையாக, அடர்த்தியாக எப்படி வளரச் செய்வது. இந்த கால சூழ்நிலையில் அனைவருக்குமே முடி உதிர்வு பிரச்சினை இருக்கின்றது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க நம் வீட்டிலேயே சுலபமான முறையில், மிக மிக சுலபமான முறையில் எண்ணையை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு 1/2 லிட்டர் அளவு தேங்காய் எண்ணெய் தேவைப்படும். பச்சையாக இருக்கும், கருவேப்பிலையை, தண்ணீரில் போட்டு கழுவி நிழலில் காய வைத்து விட வேண்டும். கருவேப்பிலை காய்ந்து விடக்கூடாது. கருவறையில் இருக்கும் தண்ணீர் நன்றாக உளர வேண்டும். கருவேப்பிலை பச்சை நிறத்திலேயே தான் இருக்க வேண்டும். பச்சை நிறத்திலேயே இருக்கும் அந்த க

எப்போது தலையில் வழுக்கை விழுமோ, என்ற அளவிற்கு முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? கண்ண மூடிட்டு இத மட்டும் குடிச்சிடுங்க! 10 நாட்கள் கழித்து, உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட உதிராது.

எப்போது தலையில் வழுக்கை விழுமோ, என்ற அளவிற்கு முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? கண்ண மூடிட்டு இத மட்டும் குடிச்சிடுங்க! 10 நாட்கள் கழித்து, உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட உதிராது. சில பேருக்கு தலை முடிஉதிர்வை என்னதான் செய்தாலும் கட்டுப்படுத்தவே முடியாது. பல வகையான எண்ணெய்கள், பல வகையான மூலிகைகள், செம்பருத்திப் பூ, இலை, இப்படி எப்பேர்ப்பட்ட பொருட்களை தலை முடிக்கு பயன்படுத்தினாலும், ஒரு பிரயோஜனமும் இருக்காது. தலைமுடி உதிர்ந்து கொண்டே இருக்கும். எப்போது வழுக்கையாகி விடுமோ என்ற பயம் நமக்கு வந்து விடும். அந்த அளவிற்கு பிரச்சனை அதிகமாக இருக்கும். இதற்கு நிரந்தர தீர்வு காண ஒரு வழி உள்ளது. முற்றிலும் இயற்கையான வழிமுறை தான் இது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. அது என்ன வழி என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம், நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான். இந்த இரும்புச்சத்தை அதிகரிக்கும் சக்தி கருவேப்பிலைக்கு உள்ளது. சில பேருக்கெல்லாம் கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணையை வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால்