Advertisement

2 டம்ளர் சுடு தண்ணீர் குடித்தால் 2 நாளில் இதெல்லாம் சரியாகி விடுமா?

2 டம்ளர் சுடு தண்ணீர் குடித்தால் 2 நாளில் இதெல்லாம் சரியாகி விடுமா?

நீர் இன்றி அமையாது உலகு என்று வள்ளுவர் கூறியது எவ்வளவு உண்மை என்று அப்போது உணர முடிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் இப்போது அது நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறோம். உயிரின் ஆதாரமே நீர் தான். அனைத்தும் தெரிந்தும் நம்மில் எவ்வளவு பேர் தேவையான நீரை உடலுக்கு தந்து கொண்டிருக்கிறோம்? எங்கே? நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள் பார்க்கலாம். ஒரு நாளைக்கு சராசரியாக எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்கிறீர்கள்? அதிக சதவீதம் பேர் அசடு வழிந்து கொண்டிருப்பீர்கள். ஏனெனில் உங்களுக்கே தெரியும் நீங்கள் அருந்தும் நீர் உங்களுக்கு பற்றாக்குறை தான் என்று அல்லவா? தெரிந்தே உங்கள் உடலை பாதிப்படைய செய்து கொண்டிருக்கிறீர்கள்.

https://dheivegam.com/wp-content/uploads/2017/07/water-life-crop.jpg

ஒரு மனிதன் தினமும் சுமார் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது ஆரோக்கியமாக வாழ உதவும் என்று ஆய்வு கூறுகிறது. இவை அவர் அவர்களின் இடத்திற்கும், பருவ நிலை மாற்றத்திற்கும் ஏற்ப மாறுபடும். ஆனால் பெரும்பாலானோர் வெறும் ஒரு லிட்டர் தண்ணீர் தான் பருகுகிறார்கள். இதனால் உடலில் பலதரப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. நம் உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேற தண்ணீர் தான் துணை செய்கிறது. நீரின் அளவு குறைந்தால் கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். நோய்கள் பெருகும்.

காலையில் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அருந்துவதை விட சுடு தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும். ரத்த அழுத்தம், மூட்டு வலி, இதயத்துடிப்பு சீராகுதல், இருமல், மலசிக்கல், உடல் அசதி, ஆஸ்துமா, கருப்பை நோய், சிறுநீரக பிரச்சனை, வயிற்று பிரச்சனைகள், தலைவலி போன்றவை வெந்நீர் பருகுவதால் தீரும். முகம் பொலிவு பெறும். உஷ்ணம் குறைந்து தலைமுடி உதிர்வது நிற்கும். கொழுப்பு குறைந்து தொப்பை கரையும். இந்த வெந்நீர் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் விரைவாக குணமடையும் தீவிர பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.

hot-water

மூன்று நாட்கள் தொடர்ந்து வெந்நீர் பருகுவதால் தீராத தலை வலி மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்படும். பத்தே நாட்களில் வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். நன்றாக பசி எடுக்கத் துவங்கும். கருப்பை தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். காது, மூக்கு, தொண்டை போன்ற உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளும் தீரும். ஒரு மாதத்தில் நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் சீராகும். நான்கு மாதங்களில் கெட்ட கொழுப்பு கரைந்து விடும். உடல் எடை சீராகும். மேலும் ஆஸ்துமா இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் குறைந்துவிடும். இறைப்பு நோய் குணமாகும். ஆறு மாதங்களில் நரம்பு பிரச்சனைகள் தீரும். ஒன்பது மாதங்களில் புற்றுநோய் ஏற்படக்கூடிய காரணிகள் அழிக்கப்பட்டு உடல் புத்துணர்வு பெறும். கை, கால் வலிப்பு மற்றும் கை, கால் முடக்கம் போன்ற பிரச்சனைகள் குறைந்துவிடும்.

hot-water1

இந்த வெண்ணீர் சிகிச்சையை துவங்கும் போது சற்றே சிரமமாகத் தான் இருக்கும். பழகி போனால் சரியாகி விடும். இந்த முறைக்கு கட்டாயம் கேன் மற்றும் ஆர்.ஓ தண்ணீரை உபயோகப்படுத்த வேண்டாம். அதில் சேர்க்கப்படும் சில வேதியல் பொருட்கள் மற்றும் குளோரின் போன்றவை உகந்தது அல்ல. மழை நீரில் உயிர் சத்து இருப்பதால் சுத்தமான மழை நீர் கொண்டு இந்த முறையை செய்தால் மேலும் சிறப்பான பலன்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அல்லது ஆற்று நீர், அருவி நீர் போன்ற மூலிகை செடிகளை தழுவி கொண்டு வரும் அற்புத நீரும் பயன்படுத்தலாம்.