திருநெல்வேலி அல்வா என்ற பெயரை கேட்டாலே அனைவரின் வாயிலும் எச்சில் ஊறும். இன்று இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். வீட்டிலேயே திருநெல்வேலி அல்வா செய்யலாம் வாங்க தேவையான பொருட்கள் : சம்பா கோதுமை - 1/2 கப் சர்க்கரை - 1 1/2 கப் முந்திரி பருப்பு - 12 பசு நெய் - 3/4 கப் செய்முறை : சம்பா கோதுமையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். கோமை நன்றாக ஊறியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும். அதிலிருந்து கோதுமையை பிழிந்து கோதுமை பால் எடுத்துக் கொள்ளவும். அந்த சக்கையை மறுபடியும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும், கோதுமை பாலை பிழிந்து எடுத்து கொள்ளவும். இந்த முறையை மறுபடியும் ஒரு முறை பின்பற்றி கோதுமை பாலை சேகரித்து கொள்ளவும். இந்த கோதுமை பாலை குறைந்தபட்சம் 30 நிமிடம் அந்த பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே வைத்து கொள்ளவும். இப்பொழுது அதில் மேலே தேங்கியுள்ள தெளிந்த நீரை மெதுவாக வேறு ஒரு பாத்திரத்துல ஊற்றி எடுத்துக்கொள்ளவும். அடியில் தேங்கியுள்ள கோதுமை பால் கரைசலை மற்றும் பயன்படுத்தி கொள்ளவும். முந்திரி
Cinemugam is a popular source of entertainment news and updates focused on Tamil cinema and television.