Skip to main content

Posts

Showing posts from June, 2021

வீட்டிலேயே திருநெல்வேலி அல்வா செய்யலாம் வாங்க

திருநெல்வேலி அல்வா என்ற பெயரை கேட்டாலே அனைவரின் வாயிலும் எச்சில் ஊறும். இன்று இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். வீட்டிலேயே திருநெல்வேலி அல்வா செய்யலாம் வாங்க தேவையான பொருட்கள் : சம்பா கோதுமை - 1/2 கப் சர்க்கரை - 1 1/2 கப் முந்திரி பருப்பு - 12 பசு நெய் - 3/4 கப் செய்முறை : சம்பா கோதுமையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். கோமை நன்றாக ஊறியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும். அதிலிருந்து கோதுமையை பிழிந்து கோதுமை பால் எடுத்துக் கொள்ளவும். அந்த சக்கையை மறுபடியும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும், கோதுமை பாலை பிழிந்து எடுத்து கொள்ளவும். இந்த முறையை மறுபடியும் ஒரு முறை பின்பற்றி கோதுமை பாலை சேகரித்து கொள்ளவும். இந்த கோதுமை பாலை குறைந்தபட்சம் 30 நிமிடம் அந்த பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே வைத்து கொள்ளவும். இப்பொழுது அதில் மேலே தேங்கியுள்ள தெளிந்த நீரை மெதுவாக வேறு ஒரு பாத்திரத்துல ஊற்றி எடுத்துக்கொள்ளவும். அடியில் தேங்கியுள்ள கோதுமை பால் கரைசலை மற்றும் பயன்படுத்தி கொள்ளவும். முந்திரி

அரச்சுக் கலக்கி, Mango Arachu Kalakki, Kerala Palakkad Special, Amma Samayal.

அரச்சுக் கலக்கி அரச்சுக் கலக்கி தேவையான பொருள்கள்: பச்சை மாங்காய் - சில துண்டுகள்  துருவிய தேங்காய் - 3 டீ ஸ்பூன்  புளித்த மோர் - 1 கப்  கடுகு - 1/4 டீ ஸ்பூன்  பச்சை மிளகாய் -1  எண்ணெய் - தேவையான அளவு  சிவப்பு மிளகாய் - காரத்துக்கு ஏற்ப  வெந்தயம் - சிறிதளவு  கருவேப்பிலை - சிறிதளவு  உப்பு - தேவைப்பட்டால் அரச்சுக் கலக்கி செய்முறை: 1. மாங்காயை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அரச்சுக் கலக்கி 2. இத்துடன் துருவிய தேங்காய் மற்றும் பச்சை மிளகாய்த் துண்டங்களைச் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அரச்சுக் கலக்கி 3. அரைத்த கலவையில் புளித்த மோரை ஊற்றி நன்கு கலக்கவும். அரச்சுக் கலக்கி 4. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, சிவப்பு மிளகாய், வெந்தயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும். அரச்சுக் கலக்கி 5. மாங்காய், தேங்காய், மோர் கலந்த கலவையில் இந்தத் தாளித்த கலவையைக் கொட்டிக் கிளறவும், தேவைப்பட்டால் உப்பு சேர்க்கலாம். அரச்சுக் கலக்கி 6. கடைசியாக, 'அரச்சுக் கலக்கி'யைக் கருவேப்பிலை இலைகளால் அலங்கரித்துப் பரிமாறலாம். அரச்சுக் கலக்கி 7. அரச்சுக் கலக்கி தயாரிக்க மாங்காய்மட்ட

உருளைக் கிழங்கு ஸ்டூ, Potato Stew, Kerala Palakkad Special, Amma Samayal.

Kerala Special உருளைக் கிழங்கு ஸ்டூ  தேவையான பொருள்கள்:  உருளைக் கிழங்கு - 2 அல்லது 4 (அளவைப் பொறுத்து)  தக்காளி - 2  மிளகாய் - 4  துவரம் பருப்பு - 1/2 கப்  எண்ணெய் - 2 டீ ஸ்பூன்  தேங்காய் - 1/2  கொத்தமல்லி விதைகள் - சிறிதளவு  கடலைப் பருப்பு - சிறிதளவு  உளுத்தம் பருப்பு - சிறிதளவு  மஞ்சள் தூள் - சிறிதளவு  தாளிக்கக் கடுகு, சீரகம்  உப்பு - தேவையான அளவு  கருவேப்பிலை - சிறிதளவு  கொத்தமல்லி - சிறிதளவு  உருளைக் கிழங்கு ஸ்டூ, Kerala Palakkad Special, Amma Samayal. செய்முறை:  * உருளைக் கிழங்கைப் பெரிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும். பின்னர் அதனைத் தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கொத்தமல்லி விதைகளைப் போட்டு வறுக்கவும்  * தேங்காயை உடைத்துத் துருவி, அரை கப் அளவில் எடுத்துக்கொள்ளவும். இதேபோல் தக்காளியையும் நறுக்கிச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்  * வாணலியில் வறுத்த கலவை, தேங்காய்த் துருவல் இரண்டையும் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும், நன்றாகப் பசைபோல் அரைத்

மொளகூட்டல் Kerala Palakkad Special, Amma Samayal.

Kerala Special மொளகூட்டல் தேவையான பொருள்கள்: வாழைக்காய் -1  தேங்காயத் துருவல் - 1 கப்  சிவப்பு மிளகாய் - 2  துவரம் பருப்பு - 1 கப்  மஞ்சள் தூள் - சிறிதளவு  மிளகாய்த் தூள் - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - தேவையான அளவு  தாளிக்கக் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் மொளகூட்டல் Kerala Palakkad Special செய்முறை: 1. வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு, ஒரு சிட்டிகை மிளகாய்த் தூள் சேர்க்கலாம் 2. இன்னொரு பாத்திரத்தில் துவரம் பருப்பை நன்றாக வேகவிடுங்கள், பின்னர் அதனை நன்கு மசித்து எடுத்துக்கொள்ளுங்கள். 3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் துருவிய தேங்காயைக் கலந்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். 4. இதற்குள் வாழைக்காய் நன்கு வெந்திருக்கும். அதனுடன் மசித்த துவரம் பருப்பு, தேங்காய் கலவையைச் சேர்த்துக் கிளறிக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால் கூடுதல் உப்பு சேர்க்கலாம். 5. வா

நார்த்தங்காய் ஊறுகாய், Narthangai pickle, Citron pickle

நார்த்தங்காய் ஊறுகாய். நார்த்தங்காய் ஊறுகாய், Citron Pickle, Narthangai, தேவையான பொருட்கள்: காய்ந்த வத்தல் - 5 வெந்தயம் 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி கடுகு 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் 100 மில்லி. செய்முறை  நார்த்தங்காயை அரை வேக்காடாக வேக வைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில் 4 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நார்த்தங்காய் துண்டுகளை லேசாக வதக்கி இறக்கிக் கொள்ளவும்.  ஆறியதும் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்புத்தூள், பெருங்காயத்தூள் போட்டு கிளறிவிடவும். கடுகு, வெந்தயத்தை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.  நார்த்தாங்காயை 3 அல்லது 4 நாட்கள் ஊறவிடவும்.  அதன்பின் வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊறிக் கொண்டிருக்கும் நார்த்தங்காய் கலவையில் ஊற்றி, வறுத்து வைத்துள்ள கடுகு, வெந்தயத்தைப் போட்டுக் கிளறி, எடுத்து பாட்டிலில் போட்டு வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும். அம்மா சொல்லிக்கொடுத்த இந்த நார்த்தங்காய் ஊறுகாய் ரொம்ப பிடிச்சிருந்தா நம்ம வெப்சைட் ஐ லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.  Narthangai pickle, Citron pickle, நார்த்தங்காய் ஊறுக

இந்தியாவில் உள்ள கடலைச் சேரா ஆறு எது?

இந்தியாவில் உள்ள கடலைச் சேரா ஆறு எது? இந்தியாவில் உள்ள கடலைச் சேரா ஆறு எது? நீரின் ஓட்டத்தை ஆறு என்கிறோம். ஆறானது குளங்கள் முதற்றோ, பனிப்பாறைகள் முதற்றோ, ஊற்றுகள் முதற்றோ தோன்றும். பல ஓடைகள் சேர்ந்தொரு ஆறாகலாம். இந்தியாவில் உள்ள ஆறுகள் கிழக்கிலோ மேற்கிலோ உள்ள பெருங்கடல்களில் கலக்கின்றன. ஆனால், இந்தியாவில் கடலில் கலக்காத ஒரு ஆறு உள்ளது. கடலில் கலக்காவிட்டால் ஆற்றின் கொள்ளளவு என்னாகிறது? லூனி ஆறு. ஆரவள்ளி மலைத்தொடரின் நாகா மலைகளில் தோன்றி ராஜஸ்தானின் அஜ்மர் மாவட்டத்தின் வழியே பாயும் இந்நதி கடலிலோ பிற ஆறுகளிலோ கலப்பதில்லை. மாறாக, குஜராத்தின் குட்ச் மாவட்டத்தை அடைந்து மீண்டும் ராஜஸ்தானின் தென்மேற்கு பகுதிக்குள் நுழைகிறது. தன் 495 கிலோ மீட்டர் பயணத்தை குட்ச் பாலைவனத்தோடு முடித்துக் கொள்கிறது லூனி. ராஜஸ்தானில் பெரும்பாலும் தன் காலத்தை கழிக்கும் லூனி, மழைப் பொழிவின்றி பாய்வதில்லை. ஓடையாக தன் பயணத்தைத் தொடர்கிறது. சில முறை வழியிலேயே வறண்டு போய்விடுகிறது. தன் பயணத்தைத் தொடர்ந்தாலும் குட்ச் பாலைவனத்தில் உள்ள தன் ஆற்றுப் படுக்கையில் மரணித்து விடுகிறது.

காரைக்குடி சிக்கன் வறுவல், Karaikudi Chicken Varuval Recipe In Tamil

காரைக்குடி சிக்கன் வறுவல் தமிழ்நாட்டில் காரைக்குடி உணவுகள் மிகவும் பிரபலமானவை மற்றும் சுவையானவையும் கூட. அதிலும் காரைக்குடி சிக்கன் ரெசிபிக்கள் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் இந்த வார விடுமுறை அன்று காரைக்குடி ரெசிபிக்களை முயற்சிக்க நினைத்தால், காரைக்குடி சிக்கன் வறுவலை செய்து சுவையுங்கள். இந்த வறுவல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபியை வீட்டில் செய்தால், அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள். காரைக்குடி சிக்கன் வறுவல் உங்களுக்கு காரைக்குடி சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி சிக்கன் வறுவல் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... * சிக்கன் - 300 கிராம் * மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் * மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் * எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப வறுத்து அரைப்பதற்கு... * மிளகு - 1 டீஸ்பூன் * தேங்காய் - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது) * வரமிளகாய் - 4 * மல்லி - 1 டீஸ்பூன் *

இட்லி மாவு போண்டா, Idli Batter Bonda Recipe In Tamil

இட்லி மாவு போண்டா உங்களுக்கு மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது, நல்ல சூடான, காரசாரமான போண்டாவை சாப்பிட ஆசையாக உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் கடலை மாவு எதுவும் இல்லையா? கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் இட்லி/தோசை மாவு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டே ஒரு அற்புதமான சுவையில், மிகவும் எளிமையான முறையில் போண்டா செய்யலாம். இந்த போண்டாவிற்கு தேங்காய் சட்னியை செய்து சாப்பிட்டால், இன்னும் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இட்லி மாவு போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி மாவு போண்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: * இட்லி/தோசை மாவு - 1 கப் * அரிசி மாவு - 1/4 கப் * பச்சை மிளகாய் - 1 * வெங்காயம் - 1 * தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிது * உப்பு - சுவைக்கேற்ப * எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: * முதலில் ஒரு பௌலில் இட்லி/தோசை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிகவும் பொடி

காய்கறிகளை பயன்படுத்த ஸ்மார்ட் டிப்ஸ்! Smart Kitchen Tips, Amma Samayal.

காய்கறிகளை சுத்தப்படுத்துவது எப்படி?  காய்கறிகளை சுத்தப்படுத்துவது எப்படி?  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இந்த கரைசலில் நாம் வாங்கிய காய்கறிகளை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். கிருமிகள் மற்றும் ரசாயன நச்சுக்கள் இன்றி காய்கறிகள் சுத்தமாகும். நன்கு அலசிய பின் காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தவும். மஞ்சள், உப்புக்கு கரைசலுக்கு பதிலாக சிறிதளவு வினிகர் சேர்த்தும் காய்கறிகளை சுத்தப்படுத்தலாம். பச்சைமிளகாய் பாதுகாப்பு டிப்ஸ். பச்சை மிளகாயை காம்புடன் ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் அழுகிவிடும். காம்பை எடுத்துவிட்டு வெறும் மிளகாய் மட்டும் வைத்தால், மிளகாயும் அழுகாது, இரண்டு மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.  பச்சைமிளகாய் நறுக்கும் பொழுது கையில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க நறுக்குவதற்கு முன் கைகளில் சிறிதளவு நல்லெண்ணெய் தடவி கொண்டு பச்சை மிளகாய் நறுக்கவும். எரிச்சல் வராது. இஞ்சி உரிப்பது இவ்வளவு சுலபமா! மேல்தோலை எடுக்க கத்திக்கு பதிலாக, ஷார்ப்பான ஸ்பூன் பயன்படுத்தினால் இஞ்சி தோல் உரிப்பது ஈஸியான வேலை!! ரெடிமேடு இஞ்சி, பூண்டு பேஸ்ட